தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 19, 2020, 10:34 AM IST

ETV Bharat / bharat

தங்கையுடன் பழக்கம்... ஆத்திரத்தில் கொலை செய்த பெண்ணின் சகோதரர்கள்!

மகாராஷ்டிரா: தங்கையுடன் பழக்கத்திலிருந்த திருமணமான நபரை, அப்பெண்ணின் சகோதரர்கள் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா
மகாராஷ்டிரா

மகாராஷ்டிரா மாநிலம் கோண்டி பகுதியில் அடையாளம் தெரியாத உடல் ஒன்று கிடப்பதாக காவல் துறைக்கு தகவல் கிடைத்தது. தகவலறிந்து விரைந்த காவல் துறையினர் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காவல் துறை நடத்திய விசாரணையில், உயிரிழந்தவரின் பெயர் சிவாஜி கசர் என்பது தெரியவந்தது.

மேலும், அவரை யாரேனும் கொலை செய்திருக்கலாம் என கருதி ஆகாஷ், சந்தீப் காம்ப்ளே ஆகிய இருவரையும் காவல் துறையினர் விசாரித்தனர். அதில்,இருவரும் குற்றத்தை ஒத்துக்கொண்டதையடுத்து கைது செய்தனர். அவர்கள், தங்களது தங்கையுடன் அந்நபர் திருமணத்தை மீறிய உறவு வைத்திருந்த காரணத்தினால் கொலை செய்தோம் எனக் கூறினர். உயிரிழந்த நபர் திருமணமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:குடிபோதையில் மளிகைக் கடையை துவம்சம் செய்த 5 இளைஞர்கள் கைது!

ABOUT THE AUTHOR

...view details