தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பக்கத்து வீட்டுக்காரரால் பாலியல் வன்புணர்வுக்கு ஆளான சிறுமி

லக்னோ: பக்கத்து வீட்டில் வசிக்கும் நபரால் 12 வயது சிறுமி பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது.

By

Published : Jul 22, 2020, 9:20 AM IST

12-yr-old-girl-raped-by-neighbour-in-uttar-pradesh-village
12-yr-old-girl-raped-by-neighbour-in-uttar-pradesh-village

உத்தரப் பிரதேச மாநிலம் கோட்வாலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமியை, அவர்களது குடும்பத்தினர் வெளியே செல்வதால் பாதுகாப்பிற்காக பக்கத்து வீட்டில் வசிக்கும் கரீம் என்பவரிடம் நேற்று முன்தினம் (ஜூலை 20) விட்டுச் சென்றனர்.

வீட்டில் சிறுமி மட்டும் தனியாக இருப்பதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட கரீம், சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கியுள்ளார். இதையறிந்த சிறுமியின் குடும்பத்தினர் கரீம் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

இதையடுத்து, அவர் தலைமறைவாகியுள்ளதாகவும், சிறுமியை மருத்துவப் பரிசோதனைக்காக அனுப்பியுள்ளதாகவும் காவல் துறையினர் தெரிவித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details