தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

டெல்லி வன்முறை: சிறையில் அடைக்கப்பட்ட 115 விவசாயிகளின் பெயர் பட்டியல் வெளியீடு

டெல்லி: டிராக்டர் பேரணியில் வெடித்த வன்முறையின் காரணமாக சிறையில் அடைக்கப்பட்ட 115 விவசாயிகளின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாக முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

By

Published : Feb 3, 2021, 7:32 PM IST

Kejriwal
முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லியில் குடியரசு தினத்தன்று நடைபெற்ற விவசாயிகளின் டிராக்டர் பேரணி வன்முறையாக வெடித்தது. இந்தப் பேரணிக்கு பின்னர் மாயமான விவசாயிகளை கண்டுப்பிடித்து தருமாறு நேற்று (பிப்.2) அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் விவசாயிகள் சங்க தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து, டிராக்டர் பேரணியின் போது மாயமான 115 விவசாயிகளின் பெயர்களை டெல்லி அரசு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக பேசிய முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், ’மாயமான விவசாயிகளைக் கண்டுப்பிடித்துத் தரக்கோரி விவசாயிகள் சங்கத் தலைவர்கள் நேற்று என்னைச் சந்தித்தனர். மாயமான விவசாயிகளின் குடும்பத்தினரும் கலக்கத்தில் உள்ளனர். டெல்லின் வெவ்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 115 விவசாயிகளின் பெயர்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது’ என்றார்.

இதனிடையே, மாயமான விவசாயிகளை அவர்களது குடும்பத்தினரோடு சேர்க்க துணைநிலை ஆளுநர் அனில் பய்ஜால் மற்றும் மத்திய அரசை அணுகவும் தயாராக உள்ளதாக அரவிந்த் கெஜ்ரிவால் உறுதியளித்துள்ளார்.

இதையும் படிங்க:சசி தரூர், பத்திரிகையாளர்கள் 6 பேர் மீது தேச துரோக வழக்குப் பதிவு

ABOUT THE AUTHOR

...view details