தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 4, 2020, 3:38 PM IST

ETV Bharat / bharat

தமிழை இழிவுபடுத்தும் முயற்சி! - பழ.நெடுமாறன் கண்டனம்!

மைசூரில் உள்ள மத்தியப் பல்கலைக்கழகத்துடன் செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தை இணைத்தது பற்றி ஆராய குழு அமைத்துள்ள மத்திய அரசை கண்டிப்பதாக பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.

nedumaran
nedumaran

இது தொடர்பாக தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கையில், “ மைசூரில் உள்ள இந்திய மொழிகள் மத்திய நிறுவனத்தை மத்தியப் பல்கலைக்கழகமாக மாற்றி, அதனுடன் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தை இணைத்தது பற்றி ஆராய்வதற்காக, ஒரு குழுவினை மத்திய அரசு நியமித்துள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் சுதந்திரமான செயல்பாட்டினை இது தடுத்துவிடும். இந்திய மொழிகளில் மிக மூத்த மொழியான தமிழை இழிவுபடுத்தும் இந்த முயற்சியை உடனடியாகக் கைவிடுமாறு மத்திய அரசை வற்புறுத்துகிறேன் “ என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

இதையும் படிங்க: ‘எம்ஜிஆருடன் ரஜினியை ஒப்பிட முடியாது’ -அமைச்சர் ஜெயக்குமார்!

ABOUT THE AUTHOR

...view details