2022ஆம் ஆண்டு தொடக்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக அரசியில் கட்சிகள் தேர்தல் பரப்புரையை தீவிரமாகத் தொடங்கியுள்ளன. இதற்கு முன் ஆட்சியிலிருந்த சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் விஜய் யாத்திரை என்ற பெயரில் பரப்புரையில் ஈடுபட்டுவருகிறார்.
இந்நிலையில், வரப்போகும் தேர்தலில் தான் போட்டியிடப்போவதில்லை என முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். மேலும், ராஷ்டிரிய லோக்தளம் கட்சியுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கவுள்ளதாக அகிலேஷ் தெரிவித்துள்ளார்.