மும்பை:சிறு அறிகுறிகளுடன் தனக்கு கரோனா பாசிட்டிவ் இருப்பதாக நடிகர் துல்கர் சல்மான் தெரிவித்துள்ளார். 35 வயதான துல்கர் சல்மான் தனது தந்தையும் உச்ச நட்சத்திரமுமான மம்முட்டிக்கு கரோனா தொற்று உறுதியான பின்பு கோவிட்-19 சோதனை மேற்கொண்டார்.
இது குறித்து அவர் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளத்தில் அறிக்கையாகப் பதிவிட்டு அச்செய்தியைப் பகிர்ந்திருந்தார். மேலும் தான் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அப்பதிவில் அவர், "எனக்கு கோவிட்-19 பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. நான் வீட்டில் தனிமைப்படுத்தலில் உள்ளேன், மேலும் எனக்கு காய்ச்சல் அறிகுறி இருக்கிறது. மற்றபடி பெரியளவில் பிரச்சினைகள் எதுவுமில்லை.