திருவனந்தபுரம்:உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் நேற்று (ஜூலை 20) 140 பன்றிகள் திடீரென உயிரிழந்தன. இந்த பன்றிகளின் ரத்த மாதிரிகளை போபாலில் உள்ள தேசிய உயர் பாதுகாப்பு விலங்குகள் ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்ததில், ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சலால் உயிரிழந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால், மாநிலம் முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில் கேரளாவின் வயநாடு மாவட்டம் மானந்தவாடியில் உள்ள இரண்டு பன்றி பண்ணைகளில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் பதிவாகியுள்ளது. இதுகுறித்து மாநில கால்நடை பராமரிப்புதுறை அலுவலர்கள் தரப்பில், மானந்தவாடியில் உள்ள பண்ணையின் பன்றிகள் அனைத்தும் நேற்று உயிரிழந்தன. இதுகுறித்து எங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.