மலப்புரம் : கேரள மாநிலம் மலப்புரத்தில் சுற்றுலா படகு கவிழ்ந்த கோர விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். கேரள மாநிலம் மலப்புரம் அருகே உள்ள தனூர் ஒட்டம்பூர் துவால்திரா என்ற பகுதியில் சுற்றுலா படகு சென்றது. மாலை 7 மணியளவில் எதிர்பாராத விதமாக படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
அந்த படகில் 30 பேர் வரையில் பயணித்ததாக கூறப்படும் நிலையில், 9 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. உயிரிழந்தவர்களில் 4 பேர் குழந்தைகள் என கூறப்பட்டு உள்ளது. அதேநேரம், உயிரிழந்தவர்கள் யார் என்பது தொடர்பான எந்தவித தகவலும் இதுவரை வெளியாகவில்லை.