கர்நாடக மாநிலம் குப்பி நகரத்தில் அமைந்துள்ளது மாரனக்கர் ஏரி (Maaranakere lake). இந்த ஏரி 46 ஏக்கர் பரப்பளவு கொண்டது. ஆனால் அரசு நிர்வாகத்தின் ஆக்கிரமிப்புகளால், தற்போது முழு ஏரியும் காணாமல்போனது.
நீரால் நிரம்பி வளமையாக இருக்க வேண்டிய ஏரி, 1998ஆம் ஆண்டிலிருந்து அரசு கட்டடங்களால் நிரம்பத் தொடங்கியது. 1998 முதல் 2021ஆம் ஆண்டுவரை ஏரி இருந்த அதே இடத்தில் ஆண்டுக்கொரு முறை அரசு கட்டங்கள் கட்டப்பட்டுள்ளன.
1998இல் ஒக்கலிகர் சமுதாயம், வீரசைவ சமுதாயம், பொது கல்வித் துறை ஆகியவற்றிற்கு இரண்டு ஏக்கர் நிலம் ஒதுக்கீடுசெய்யப்பட்டது. அதே ஆண்டில் யாதவ சமுதாயத்திற்கும் அரை ஏக்கர் நிலம் ஒதுக்கீடுசெய்யப்பட்டது. அரசு முதல் நிலை கல்லூரி, பழங்குடி மாணவர்களுக்கு விடுதிகள் உள்பட பல கட்டடங்கள் அங்கு கட்டப்பட்டுள்ளன.