சத்தீஸ்கரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சங்கீதா. இவருக்கு எட்டு வயதில் மகன் ஒருவர் உள்ளார். சங்கீதா வேலைக்காக ஆந்திரப் பிரதேச மாநிலத்திற்குச் சென்றபோது ஆட்டோ ஒட்டுநர் ஒருவர் உத்தரப் பிரதேச மாநிலம் பிலிபட்டைச் சேர்ந்த ஷப்னம் என்ற பெண்ணிடம் தன்னுடைய மகனை விற்றதாக காவல் துறையினரிடம் சங்கீதா புகார் அளித்தார்.
இந்தப் புகரையடுத்து காவல் கண்காணிப்பாளர் ஜெயபிரகாஷ் யாதவ் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு ஐந்து மணி நேரத்தில் குழந்தையைக் கண்டுபிடித்தனர்.
ஷப்னம் பிலிபட் காவல் நிலையத்திற்கு வந்து, குழந்தை விற்கப்படவில்லை என்றும் சங்கீதாவே முன்வந்து தன்னிடம் குழந்தையை கொடுத்தாகவும் தெரிவித்தார். சங்கீதாவும் ஷப்னமும் ஒரே இடத்தில் வேலைபார்த்து வந்ததாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.