தமிழ்நாடு

tamil nadu

3 மாவட்டங்களில் நடந்த என்கவுன்டரில் 7 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை!

By

Published : Jun 20, 2022, 1:45 PM IST

ஜம்மு காஷ்மீரில் கடந்த 24 மணி நேரத்தில் 7 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

terrorists
terrorists

ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் நேற்றிரவு(ஜூன் 19) பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் சேர்ந்து நடத்திய என்கவுன்டரில் 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களிடமிருந்து பயங்கர ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன. இன்று காலை புல்வாமா மாவட்டத்தில் நடந்த என்கவுன்டரில் ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டார்.

இதே போல், குல்காம் மாவட்டத்திலும் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அதன்படி, கடந்த 24 மணி நேரத்திற்குள் 7 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் சுட்டுக் கொன்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் இருவர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள். என்கவுன்டர் நடவடிக்கை தொடர்ந்து வருவதாகவும் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: ஜம்மு- காஷ்மீரில் காவல் துறையினர் மீது பயங்கரவாத கும்பல் தாக்குதல்!

ABOUT THE AUTHOR

...view details