2019-20இல் யானை தாக்கியதில் 586 பேர் உயிரிழப்பு - ஷாக்கிங் ரிப்போர்ட்
By
Published : Feb 15, 2021, 7:08 PM IST
டெல்லி: 2019-20 ஆம் ஆண்டுகளில், யானை தாக்கியதில் சுமார் 586 பேர் உயிரிழந்துள்ளதாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
யானை
2019- 2020 ஆம் ஆண்டுகளில், யானைகள் தாக்கியதில் 586 பேர் உயிரிழந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியாகியுள்ள அறிக்கையில், " 2020இல் புலி தாக்கியதில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து வருகிறது. 2019இல் 50 பேரும், 2018இல் 31 பேரும், 2017இல் 44 பேரும், 2016இல் 62 பேரும் உயிரிழந்துள்ளனர்.
வனவிலங்குகளின் வாழ்விடங்களை மேம்படுவதற்காக, பல்வேறு திட்டங்களின் கீழ் ஆண்டுதோறும் மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் நிதியுதவி வழங்கப்பட்டு வருவது. வனவிலங்குகள் பாதிப்பால் ஏற்படும் சேதங்களுக்கும் இழப்பீடுகள் அளிக்கப்படுகிறது.
வனவிலங்கு ஏற்படுத்திய சேதம்
நிவாரண தொகை
உயிரிழப்பு
5 லட்சம் வரை
பலத்த காயம்
2 லட்சம் வரை
சிறிய காயம்
சிகிச்சை செலவு 25 ஆயிரம் வரை
சொத்து/ பயிர் இழப்பு
மாநிலங்கள் தீர்மானிக்கும் பரிந்துரைப்படி பணம் வழங்கலாம்