தமிழ்நாடு

tamil nadu

2019-20இல் யானை தாக்கியதில் 586 பேர் உயிரிழப்பு -  ஷாக்கிங் ரிப்போர்ட்

By

Published : Feb 15, 2021, 7:08 PM IST

டெல்லி: 2019-20 ஆம் ஆண்டுகளில், யானை தாக்கியதில் சுமார் 586 பேர் உயிரிழந்துள்ளதாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

elephant
யானை

2019- 2020 ஆம் ஆண்டுகளில், யானைகள் தாக்கியதில் 586 பேர் உயிரிழந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியாகியுள்ள அறிக்கையில், " 2020இல் புலி தாக்கியதில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து வருகிறது. 2019இல் 50 பேரும், 2018இல் 31 பேரும், 2017இல் 44 பேரும், 2016இல் 62 பேரும் உயிரிழந்துள்ளனர்.

புலி - மனித மோதல்

அதே போல், யானைகள் தாக்கியதில் 2019-20இல் 586 பேரும், 2018-19இல் 452 பேரும், 2017-18 இல் 506 பேரும், 2016-17இல் 516 பேரும், 2015-16இல் 469 பேரும் உயிரிழந்துள்ளனர்.

யானை - மனித மோதல்

வனவிலங்குகளின் வாழ்விடங்களை மேம்படுவதற்காக, பல்வேறு திட்டங்களின் கீழ் ஆண்டுதோறும் மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் நிதியுதவி வழங்கப்பட்டு வருவது. வனவிலங்குகள் பாதிப்பால் ஏற்படும் சேதங்களுக்கும் இழப்பீடுகள் அளிக்கப்படுகிறது.

வனவிலங்கு ஏற்படுத்திய சேதம் நிவாரண தொகை
உயிரிழப்பு 5 லட்சம் வரை
பலத்த காயம் 2 லட்சம் வரை
சிறிய காயம் சிகிச்சை செலவு 25 ஆயிரம் வரை
சொத்து/ பயிர் இழப்பு மாநிலங்கள் தீர்மானிக்கும் பரிந்துரைப்படி பணம் வழங்கலாம்

இதையும் படிங்க:தெலங்கானா கார் விபத்து - ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details