2008ஆம் ஆண்டில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைமையிலான யூ.டி.ஏ கூட்டணி ஆட்சியில், 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாகப் புகார் எழுந்தது. 2012ஆம் ஆண்டு பிப்ரவரி 2ஆம் தேதியன்று, சுப்ரமணியம் சுவாமி 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஊழல் நடந்திருக்க முகாந்திரம் உள்ளது என உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்தார்.
அதன் அடிப்படையில் ஆ. ராசா தொலைத்தொடர்பு அமைச்சராக இருக்கும்போது ஒதுக்கப்பட்ட 2ஜி அலைக்கற்றைகள் ஜனநாயக விரோதமானவை மற்றும் தன்னிச்சையானவை என தெரிவித்து வழங்கப்பட்ட 122 அனுமதிகளையும் ரத்து செய்தது. 2ஜி அலைக்கற்றை முறையீட்டினை டைம் நாளிதழ் உலகின் முக்கிய 10 அதிகாரத் துஷ்பிரயோகங்களில் ஒன்றாகக் கூறியது.
இது குறித்த அரசின் புலனாய்வு, புலனாய்ந்து பெற்ற தரவுகள் குறித்த அரசின் செயற்பாடு போன்றவை விவாதிக்கப்பட்டன. ஆளும் கூட்டணிக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் புலனாய்வு செய்யும் முறை குறித்த கருத்துவேற்றுமையால் இந்திய நாடாளுமன்றம் தொடர்ந்து 23 நாள்கள் இயங்காது அவை முடக்கம் செய்யப்பட்டது.
உச்ச நீதிமன்றம் இம்முறைகேடுகள் குறித்த மத்தியப் புலனாய்வுத் துறையின் செயற்பாடுகளை நேரடியாக கண்காணிக்க தீர்மானித்தது. நாடாளுமன்றத்தின் பொதுக்கணக்கு குழுவும் முறைகேடுகளை ஆராய்ந்தது.