பிலாய்: சத்தீஸ்கர் மாநிலம், பிலாய் மாவட்டத்தில் உள்ள மைத்ரி பாக் உயிரியல் பூங்காவில், பிறந்து இரண்டு மாதங்களே ஆன "சிங்கம்" என்ற வெள்ளைப் புலிக்குட்டி அதன் கூட்டத்தோடு விடுவிக்கப்பட்டது.
இதுகுறித்து மைத்ரி பாக் உயிரியல் பூங்காவின் பொறுப்பாளர் என்.கே. ஜெயின் கூறுகையில், "கரோனா பெருந்தொற்றுக் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாகப் புலிகளின் இனப்பெருக்கம் நிறுத்தி வைக்கப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு ஒரு ஆண் புலியையும், பெண் புலியையும் கொண்டு வந்து இணை சேர்த்ததில், செப்டம்பரில் புலிக்குட்டி பிறந்தது. அதற்கு 'சிங்கம்' என்று பெயரிட்டோம். குட்டி ஆரோக்கியமாக உள்ளது" என்று தெரிவித்தார்.
அதேபோல், கடந்த அக்டோபர் மாதத்தில் மேற்குவங்க மாநிலம், சிலிகுரி அருகே உள்ள சபாரி உயிரியல் பூங்காவில், பிறந்து ஆறுமாதங்களான நான்கு புலிக்குட்டிகள் பழக்கப்படுத்துவதற்காக திறந்தவெளி அடைப்பில் விடுவிக்கப்பட்டன.