ஸ்ரீநகர்: தெற்கு காஷ்மீர் பகுதியிலுள்ள அனந்த்நாக் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இது குறித்துப் பேசிய காவல் துறையினர், ”பயங்கரவாதிகள் ஊடுருவல் பற்றி தகவல் வந்ததையடுத்து ஆர்ஆர் பிரிவைச் சேர்ந்த ராணுவத்தினர், மத்திய பாதுகாப்பு படையினர், காவல் துறையினர் இணை குழுவினர் ஆகியோர் இணைந்து பாதுகாப்பு வளையம் அமைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டோம். பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த இடத்தைக் கண்டறிந்தவுடன் துப்பாக்கி சூடு நடத்தினோம்.
இதில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். தற்போது அந்தப் பகுதியில் தீீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது” என தெரிவித்துள்ளனர்.