டெல்லி: நாட்டில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை நேற்று (மே 7) ரூ. 50 உயர்த்தப்பட்டது. அதன்படி ரூ.965-க்கு விற்பனை செய்யப்பட்ட சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ.1,015-க்கு விற்பனை செய்யப்படுகிறது. முன்னதாக, மார்ச் 22ம் தேதி சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தப்பட்டது. அப்போது, வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டர் விலை ரூ.104 உயர்த்தப்பட்டது.
சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ1,508-க்கு விற்பனையாகிறது. இந்த விலை உயர்வு மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு அரசியல் கட்சிகள் கண்டனங்களை எழுப்பிவருகின்றன. இதனிடையே காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, பாஜக ஆட்சியில் இரண்டு சிலிண்டர்களுக்கான விலையை ஒரு சிலிண்டருக்கு கொடுக்க வேண்டியிருக்கிறது என்று தெரிவித்தார்.