தமிழ்நாடு

tamil nadu

கோர விபத்து: பள்ளத்தாக்கில் வாகனம் கவிழ்ந்து 11 பேர் பலி!

By

Published : Oct 31, 2021, 1:34 PM IST

உத்தரகாண்ட் மாநிலத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் 11 பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

உயிரிழப்பு
உயிரிழப்பு

உத்தரகாண்ட்(விகாஸ்நகர்): உத்தரகாண்ட் மாநிலம், சக்ரதாவில் இருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு விகாஸ் நகர் நோக்கி இன்று (அக்.31) வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தது.

அப்போது வைலா என்ற இடத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம், ஆழமான பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விழுந்தது. இதில் 11 பயணிகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும், பலர் படுகாயமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: ’பெண் சக்திக்கு சிறந்த உதாரணம் இந்திரா காந்தி’

ABOUT THE AUTHOR

...view details