திருவண்ணாமலை மருத்துவக்கல்லூரி மாணாக்கர்கள் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி - Students created awareness about drugs
🎬 Watch Now: Feature Video

திருவண்ணாமலை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்ததையடுத்து போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பல்வேறு அமைப்புகளால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று (ஆக-26) திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சார்பில் போதைப்பொருட்கள் தடுப்பு குறித்தான தீமைகள் பற்றியும், போதைப் பொருட்கள் உட்கொள்வதால் உடல் ரீதியாக ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்வளாகத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் 500-க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவ - மாணவிகள் மற்றும் மருத்துவர்கள் கைகளில் விழிப்புணர்வு குறித்தான பதாகைகளை ஏந்தி போதைப்பொருட்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.