ETV Bharat / state

தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சிக்கு சேவை - திருமா குற்றச்சாட்டு - thiruma slashes

வேலூர்: தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சியினருக்கு சேவை செய்யும் அமைப்பாக இருந்து வருகிறது என்று விசிக தலைவர் தொல்.திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.

thiruma
author img

By

Published : May 8, 2019, 5:41 PM IST

வேலூர் மாவட்டம் தேவரிஷி குப்பம் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் இன்று பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்தார்,

தற்போது தேனியில் சர்ச்சைக்குரிய முறையில் வாக்குப்பதிவு இயந்திரம் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது என்ற தகவலை எதிர்க்கட்சிகள் புகாராக தேர்தல் ஆணையத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர். எனவே தலைமை தேர்தல் அலுவலர் விரிவான விளக்கம் அளித்து அனைத்து வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும்.

மோடிதான் பிரதமராக வருவார் என்று அமித்ஷா உட்பட பலர் மீண்டும் மீண்டும் கூறி வருவது, வாக்குப்பதிவு இயந்திரங்களில் அவர்கள் தேர்தல் ஆணைய அலுவலர்களை கொண்டு தில்லுமுல்லு செய்ய முயற்சிக்கிறார்களா என்று சந்தேகத்தை எழுப்புகிறது.

திருமா பேட்டி

அமமுகவுக்கும் திமுகவுக்கும் ஏன் இந்த நேரத்தில் முடிச்சி போட முயற்சிக்கிறார்கள் என்று விளங்கவில்லை. அதிமுகவிற்கு பெரிய பாதிப்பு ஏற்படும் என்ற அச்சம் ஏற்பட்டதால் தான் இப்படிப்பட்ட தகவலைப் பரப்புகிறார்கள். திமுக மற்றும் அதன் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளை அமமுகவுடன் இணைத்து பேசுவது அர்த்தமற்றது. தேர்தல் ஆணையம் ஆளும் கட்சி விரும்புவதை நிறைவேற்றி தரக் கூடிய ஒரு சேவை அமைப்பாக செயல்படுகிறது. தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்பட்டால் மட்டுமே ஜனநாயகத்தை காப்பாற்ற முடியும் என்றார்.

வேலூர் மாவட்டம் தேவரிஷி குப்பம் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் இன்று பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்தார்,

தற்போது தேனியில் சர்ச்சைக்குரிய முறையில் வாக்குப்பதிவு இயந்திரம் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது என்ற தகவலை எதிர்க்கட்சிகள் புகாராக தேர்தல் ஆணையத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர். எனவே தலைமை தேர்தல் அலுவலர் விரிவான விளக்கம் அளித்து அனைத்து வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும்.

மோடிதான் பிரதமராக வருவார் என்று அமித்ஷா உட்பட பலர் மீண்டும் மீண்டும் கூறி வருவது, வாக்குப்பதிவு இயந்திரங்களில் அவர்கள் தேர்தல் ஆணைய அலுவலர்களை கொண்டு தில்லுமுல்லு செய்ய முயற்சிக்கிறார்களா என்று சந்தேகத்தை எழுப்புகிறது.

திருமா பேட்டி

அமமுகவுக்கும் திமுகவுக்கும் ஏன் இந்த நேரத்தில் முடிச்சி போட முயற்சிக்கிறார்கள் என்று விளங்கவில்லை. அதிமுகவிற்கு பெரிய பாதிப்பு ஏற்படும் என்ற அச்சம் ஏற்பட்டதால் தான் இப்படிப்பட்ட தகவலைப் பரப்புகிறார்கள். திமுக மற்றும் அதன் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளை அமமுகவுடன் இணைத்து பேசுவது அர்த்தமற்றது. தேர்தல் ஆணையம் ஆளும் கட்சி விரும்புவதை நிறைவேற்றி தரக் கூடிய ஒரு சேவை அமைப்பாக செயல்படுகிறது. தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்பட்டால் மட்டுமே ஜனநாயகத்தை காப்பாற்ற முடியும் என்றார்.

வாக்கு எண்ணிக்கை மையங்களில் பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும் - வேலூரில் தொல் திருமாவளவன் பேட்டி

வேலூர் மாவட்டம் தேவ ரிஷி குப்பம் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் இன்று பங்கேற்றார் பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், தேனி மாவட்ட வாக்கு எண்ணிக்கை மையத்தில்  சர்ச்சைக்குரிய வகையில் வாக்குப்பதிவு எந்திரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது ஏற்கனவே மதுரையில் பெண் தாசில்தார் ஒருவர் வாக்கு எண்ணிக்கை அறைக்குள் புகுந்து இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக ஏதோ செய்து கொண்டிருந்தார் என்ற புகார் எழுந்தது  தற்போது தேனியில் சர்ச்சைக்குரிய முறையில் வாக்குப்பதிவு எந்திரம் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது என்ற தகவலை எதிர்க்கட்சிகள் புகாராக தேர்தல் ஆணையத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர் தலைமை தேர்தல் அதிகாரி விரிவான விளக்கம் அளிக்க வேண்டும் அனைத்து வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும் மோடி தான் பிரதமராக வருவார் என்று அமித்ஷா உள்பட திரும்பத் திரும்ப சொல்வதன் மூலம் வாக்குப்பதிவு எந்திரங்களில் அவர்கள் தேர்தல் ஆணையத்தின் அதிகாரிகளை கொண்டு தில்லுமுல்லு செய்ய முயற்சிக்கிறார்களொ என்று சந்தேகம் வலுவாக எழுந்திருக்கிறது. எனவே மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை சேர்ந்த வேட்பாளர்கள் வாக்கு எண்ணிக்கை மையங்களை 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டும். திமுக அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்ற தங்க தமிழ்ச்செல்வன் கூறியிருப்பது நகைச்சுவையாக இருக்கிறது  அமமுகவுக்கும் திமுகவுக்கும் ஏன் இந்த நேரத்தில் முடிச்சி போட முயற்சிக்கிறார்கள் என்று விளங்கவில்லை இரண்டு பேருக்கும் பொது எதிரி தான் அதிமுக என்று தேர்தல் களத்தில் திமுகவும் அமமுகவும் பணியாற்றியுள்ளது இதனால் அதிமுகவிற்கு பெரிய பாதிப்பு ஏற்படும் என்ற அச்சம் ஏற்பட்டதால் தான் இப்படிப்பட்ட தகவலைப் பரப்புகிறார்கள் என்று கருதுகிறேன் திமுக தான் இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்றாலும் அந்த கூட்டணியில் அங்கம் வகிக்கிறோம் என்ற முறையில் திமுகவையோ அல்லது அதன் கூட்டணி கட்சிகளையோ அமமுகவுடன்  இணைத்து பேசுவது அர்த்தமற்றது. உள்ளாட்சி தேர்தலை தள்ளிப் போட்டுக் கொண்டிருக்கிறது தமிழக அரசு. எனவே உள்ளாட்சித் தேர்தல் கூட்டணி குறித்து அறிவிப்பு வந்தவுடன் தெரிவிப்போம் . தேர்தல் ஆணையம் என்பதே ஆளும் கட்சிக்கு சேவை செய்யும் அமைப்பு தான் ஆளும் கட்சிகள் விரும்புவதை நிறைவேற்றித் தரக் கூடிய ஒரு சேவை அமைப்பாகவே தேர்தல் ஆணையம் செயல்படுகிறது என்று அது சுதந்திரமாக செயல்படுகிறதோ அன்றுதான் ஜனநாயகத்தை காப்பாற்ற முடியும்" என்றார்
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.