ETV Bharat / state

புதிய மாவட்டங்களின் தொடக்க விழாவிற்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்த அமைச்சர்!

author img

By

Published : Nov 22, 2019, 9:01 AM IST

வேலூர்: ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் மாவட்ட அலுவல் பணிகளை முதலமைச்சர் தொடங்கி வைக்கும் விழாவிற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு பதிவுத் துறை அமைச்சர் கே.சி. வீரமணி நேரில் சென்று பார்வையிட்டார்

Examine ceremony preparations ranipettai and thirupathur district open function

வேலூர் மாவட்டத்தில் இருந்து ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் ஆகிய இரண்டு புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு, இரண்டு மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

புதிய மாவட்டங்களின் அலுவல் பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் வந்து தொடங்கி வைக்கிறார். இதற்கான விழா வருகின்ற 28ஆம் தேதி நடைபெறுகிறது. அதன்படி ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூரில் முதலமைச்சர் நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், விழா ஏற்பாடுகளை தமிழ்நாடு பதிவுத் துறை அமைச்சர் கே.சி. வீரமணி மற்றும் வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் இன்று நேரில் சென்று பார்வையிட்டனர்.

கே.சி. வீரமணி ஆய்வு

அப்போது, ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள ஆட்சியர் திவ்யதர்ஷினி காவல்துறை கண்காணிப்பாளர் விஜயகுமார், திருப்பத்தூர் மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள ஆட்சியர் சிவனருள், காவல் துறை கண்காணிப்பாளர் மயில்வாகனன் ஆகியோர் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: இன்று உதயமாகிறது ’தென்காசி’ புதிய மாவட்டம்!

வேலூர் மாவட்டத்தில் இருந்து ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் ஆகிய இரண்டு புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு, இரண்டு மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

புதிய மாவட்டங்களின் அலுவல் பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் வந்து தொடங்கி வைக்கிறார். இதற்கான விழா வருகின்ற 28ஆம் தேதி நடைபெறுகிறது. அதன்படி ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூரில் முதலமைச்சர் நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், விழா ஏற்பாடுகளை தமிழ்நாடு பதிவுத் துறை அமைச்சர் கே.சி. வீரமணி மற்றும் வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் இன்று நேரில் சென்று பார்வையிட்டனர்.

கே.சி. வீரமணி ஆய்வு

அப்போது, ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள ஆட்சியர் திவ்யதர்ஷினி காவல்துறை கண்காணிப்பாளர் விஜயகுமார், திருப்பத்தூர் மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள ஆட்சியர் சிவனருள், காவல் துறை கண்காணிப்பாளர் மயில்வாகனன் ஆகியோர் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: இன்று உதயமாகிறது ’தென்காசி’ புதிய மாவட்டம்!

Intro:வேலூர் மாவட்டம்

ராணிப்பேட்டை திருப்பத்தூர் புதிய மாவட்டம் துவக்க விழாவிற்கு 28ம் தேதி முதல்வர் வருகை; விழா ஏற்பாடுகளை அமைச்சர் மாவட்ட ஆட்சியர்கள் ஆய்வு செய்தனர்Body:வேலூர் மாவட்டத்தில் இருந்து ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் ஆகிய இரண்டு புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது இது தொடர்பாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டு அதை தொடர்ந்து இரண்டு மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர் இந்த நிலையில் அடுத்த கட்டமாக புதிய மாவட்டங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் வந்து முறைப்படி துவங்கி வைக்கிறார் இதற்கான விழா வரும் 28ம் தேதி நடைபெறுகிறது அதன்படி ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் பகுதியில் நடைபெறும் விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு புதிய மாவட்டங்களை துவக்கி வைக்கிறார் இதையொட்டி ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூரில் முதல்வர் நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருக்கிறது இந்த நிலையில் விழா ஏற்பாடுகளை தமிழக பத்திரப்பதிவு துறை அமைச்சர் கே சி வீரமணி மற்றும் வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் இன்று நேரில் சென்று பார்வையிட்டனர். அப்போது ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ள திவ்யதர்ஷினி மற்றும் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ள சிவனருள் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விஜயகுமார் மயில்வாகனன் ஆகியோர் உடனிருந்தனர்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.