ETV Bharat / state

நிலத்தடி நீர் உறிஞ்சல்... தொழிற்சாலைக்கு சீல்வைப்பு! - ambur

வேலூர் : ஆம்பூரில் உள்ள தண்ணீர் தொழிற்சாலை உரிய அனுமதியின்றி நிலத்தடி நீரை உறிஞ்சி வந்ததால் நகராட்சி அலுவலர்கள் தொழிற்சாலைக்கு சீல் வைத்தனர்.

போலி தண்ணீர் பாட்டில்கள்
author img

By

Published : Jun 13, 2019, 8:07 AM IST

வேலூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த எ-கஸ்பா காமராஜர் நகர் பகுதியில் அனுமதியின்றி ஆழ்துளை கிணறு அமைத்து தினந்தோறும் லட்சக்கணக்கான லிட்டர் நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் பல மாதங்களாக அரசு அனுமதியின்றி இயங்கிவந்த தொழிற்சாலையில் ஆம்பூர் நகராட்சி உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.

நிலத்தடி நீர் உறிஞ்சல்

பின்பு அத்தொழிற்சாலையில் சோதனை மேற்கொண்டதில் பல்வேறு நிறுவனங்களின் பெயரில் போலி தண்ணீர் பாட்டில்கள் இருப்பதைக் கண்டுபிடித்தனர். மேலும் அதனை பறிமுதல் செய்து நகராட்சி அலுவலர்கள் சீல் வைத்தனர். இச்செயலுக்கு சமூக ஆர்வலர்கள் இதே போன்று அனுமதியின்றி செயல்பட்டு நிலத்தடி நீரை உறிஞ்சி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்கும் பல நிறுவனங்களின் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்.

வேலூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த எ-கஸ்பா காமராஜர் நகர் பகுதியில் அனுமதியின்றி ஆழ்துளை கிணறு அமைத்து தினந்தோறும் லட்சக்கணக்கான லிட்டர் நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் பல மாதங்களாக அரசு அனுமதியின்றி இயங்கிவந்த தொழிற்சாலையில் ஆம்பூர் நகராட்சி உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.

நிலத்தடி நீர் உறிஞ்சல்

பின்பு அத்தொழிற்சாலையில் சோதனை மேற்கொண்டதில் பல்வேறு நிறுவனங்களின் பெயரில் போலி தண்ணீர் பாட்டில்கள் இருப்பதைக் கண்டுபிடித்தனர். மேலும் அதனை பறிமுதல் செய்து நகராட்சி அலுவலர்கள் சீல் வைத்தனர். இச்செயலுக்கு சமூக ஆர்வலர்கள் இதே போன்று அனுமதியின்றி செயல்பட்டு நிலத்தடி நீரை உறிஞ்சி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்கும் பல நிறுவனங்களின் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்.

Intro: ஆம்பூரில் உரிய அனுமதியின்றி இயங்கி வந்த தண்ணீர் தொழிற்சாலைக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.


Body: வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த A - கஸ்பா காமராஜர் நகர் பகுதியில் அனுமதியின்றி ஆழ்துளை கிணறு அமைத்து தினந்தேறும் லட்சக்கணக்கான லிட்டர் நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டு பல மாதங்களாக அரசு அனுமதியின்றி இயங்கி வந்த தொழிற்சாலையில் இன்று ஆம்பூர் நகராட்சி உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

பின்பு அத்தொழிற்சாலையில் சோதனை மேற்கொண்டதில் பல்வேறு நிறுவனங்களின் பெயரில் போலி தண்ணீர் பாட்டில்களை பறிமுதல் செய்து நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.



Conclusion: அனுமதியின்றி செயல்பட்டு நிலத்தடி நீரை உறிஞ்சி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்கும் இதே போன்ற பல நிறுவனங்களின் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.