ETV Bharat / state

பணம் கேட்டு மிரட்டும் நிதி நிறுவன ஊழியர்கள்: ஆட்சியரிடம் மனு அளித்த பெண்கள்!

author img

By

Published : Jun 15, 2020, 6:33 PM IST

திருப்பூர்: தவணைப் பணத்தைக் கேட்டு பெண்களிடம் தகாத வார்த்தையில் பேசும், தனியார் நிதி நிறுவன ஊழியர்களைக் கண்டித்து பெண்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தூக்குப்போட்டு நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆட்சியர் அலுவலகத்தில் பெண்கள் ஆர்ப்பாட்டம்
நிதி நிறுவனத்தை கண்டித்து பெண்கள் ஆர்ப்பாட்டம்

திருப்பூரில் பல்வேறு பகுதிகளில் செயல்பட்டுவருகிறது, நியூ மைக்ரோ ஃபைனான்ஸ் என்னும் நிதி நிறுவனம். பல்வேறு மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்கியுள்ளது.

தற்போது ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், ஆறு மாத காலத்திற்கான தவணைத் தொகையைக் கேட்டு வற்புறுத்தக் கூடாது என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

ஆனால், மைக்ரோ ஃபைனான்ஸ் நிறுவனத்தினர், சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த பெண்களிடம் தவணைத்தொகை கேட்டு வருவதாகவும், தராத பெண்களிடம் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்துவதாகவும் கூறி, பெண்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தூக்குப்போட்டு நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து அங்கு குவிந்த காவல் துறையினர், போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க அழைத்துச் சென்றனர்.

திருப்பூரில் பல்வேறு பகுதிகளில் செயல்பட்டுவருகிறது, நியூ மைக்ரோ ஃபைனான்ஸ் என்னும் நிதி நிறுவனம். பல்வேறு மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்கியுள்ளது.

தற்போது ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், ஆறு மாத காலத்திற்கான தவணைத் தொகையைக் கேட்டு வற்புறுத்தக் கூடாது என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

ஆனால், மைக்ரோ ஃபைனான்ஸ் நிறுவனத்தினர், சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த பெண்களிடம் தவணைத்தொகை கேட்டு வருவதாகவும், தராத பெண்களிடம் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்துவதாகவும் கூறி, பெண்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தூக்குப்போட்டு நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து அங்கு குவிந்த காவல் துறையினர், போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க அழைத்துச் சென்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.