ETV Bharat / state

பணமதிப்பிழப்பு செய்தது தெரியாமல் பணம் வைத்திருந்த மூதாட்டிகளுக்கு அரசு உதவி! - thiruppur latest news

திருப்பூர்: பூமலூர் பகுதியில் பணமதிப்பிழப்பு செய்தது தெரியாமல் ரூ.46 ஆயிரம் ரூபாய் பழைய நோட்டுக்களை வைத்திருந்த மூதாட்டிகள் இருவருக்கும் அரசு சார்பில் உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

thiruppur
district collector thiruppur
author img

By

Published : Nov 29, 2019, 8:55 PM IST

திருப்பூர் மாவட்டம், பூமலூர் கிராமத்தில் முதிய சகோதரிகள் இருவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போன சமயத்தில், அவர்களது பிள்ளைகள் பணம் ஏதாவது வைத்துள்ளார்களா?, எனக் கேட்க தங்களது இறுதிக் காலத் தேவைக்காக பணம் வைத்திருப்பதாகக் கூறி அவர்களிடம் இருந்த ரூ.46 ஆயிரம் ரூபாய் பணத்தை கொடுத்துள்ளனர் .

ஆனால், அதில் ஒரு ரூபாய் கூட செலவிட முடியாத பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளாக இருந்துள்ளது. பணமதிப்பிழப்பு செய்யப்பட்டது அறியாமலேயே மூதாட்டிகள் இதுவரை இருந்து வந்துள்ளனர். பின்னர் தாங்கள் வைத்திருப்பது பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட பணம் என்பதையறிந்த இரு மூதாட்டிகளும் தங்களுடைய இறுதிக் காலத் தேவைக்காக பல்வேறு வேலைகளுக்குச் சென்று சிறுகச்சிறுக சேமித்த பணம் இப்படி செல்லாமல் ஆகிவிட்டதாக வேதனை தெரிவித்தனர்.

இதுபற்றி மாவட்ட ஆட்சியருக்கு தெரிவிக்கப்பட்டது. இதை கருத்தில் கொண்ட ஆட்சியர் மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று அவர்களுக்கு உதவிகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த ஆட்சியர் விஜய கார்த்திகேயன் பணமதிப்பிழப்பு செய்தது தெரியாமல் வைத்திருந்த ரூ.46 ஆயிரம் ரூபாய் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்களை வங்கிகள் மூலம் மாற்றமுடியாது என தெரிவித்தார்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் திருப்பூர்

மேலும் அவர், மூதாட்டிகளின் உடல் நலத்தைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கான மருத்துவ சிகிச்சைகளை அரசு சார்பில் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், இரு மூதாட்டிகளுக்கும் அரசு சார்பில் மாதாமாதம் முதியோர் உதவித்தொகை கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: உலகிலேயே அதிக வயதான மூதாட்டி மரணம்!

திருப்பூர் மாவட்டம், பூமலூர் கிராமத்தில் முதிய சகோதரிகள் இருவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போன சமயத்தில், அவர்களது பிள்ளைகள் பணம் ஏதாவது வைத்துள்ளார்களா?, எனக் கேட்க தங்களது இறுதிக் காலத் தேவைக்காக பணம் வைத்திருப்பதாகக் கூறி அவர்களிடம் இருந்த ரூ.46 ஆயிரம் ரூபாய் பணத்தை கொடுத்துள்ளனர் .

ஆனால், அதில் ஒரு ரூபாய் கூட செலவிட முடியாத பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளாக இருந்துள்ளது. பணமதிப்பிழப்பு செய்யப்பட்டது அறியாமலேயே மூதாட்டிகள் இதுவரை இருந்து வந்துள்ளனர். பின்னர் தாங்கள் வைத்திருப்பது பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட பணம் என்பதையறிந்த இரு மூதாட்டிகளும் தங்களுடைய இறுதிக் காலத் தேவைக்காக பல்வேறு வேலைகளுக்குச் சென்று சிறுகச்சிறுக சேமித்த பணம் இப்படி செல்லாமல் ஆகிவிட்டதாக வேதனை தெரிவித்தனர்.

இதுபற்றி மாவட்ட ஆட்சியருக்கு தெரிவிக்கப்பட்டது. இதை கருத்தில் கொண்ட ஆட்சியர் மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று அவர்களுக்கு உதவிகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த ஆட்சியர் விஜய கார்த்திகேயன் பணமதிப்பிழப்பு செய்தது தெரியாமல் வைத்திருந்த ரூ.46 ஆயிரம் ரூபாய் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்களை வங்கிகள் மூலம் மாற்றமுடியாது என தெரிவித்தார்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் திருப்பூர்

மேலும் அவர், மூதாட்டிகளின் உடல் நலத்தைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கான மருத்துவ சிகிச்சைகளை அரசு சார்பில் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், இரு மூதாட்டிகளுக்கும் அரசு சார்பில் மாதாமாதம் முதியோர் உதவித்தொகை கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: உலகிலேயே அதிக வயதான மூதாட்டி மரணம்!

Intro:திருப்பூர் மாவட்டம் குன்னூர் பகுதியில் பணமதிப்பிழப்பு செய்தது தெரியாமல் 46 ஆயிரம் ரூபாய் பழைய நோட்டுக்களை வைத்திருந்த மூதாட்டிகள் இருவருக்கும் அரசின் சார்பில் உதவிகள் செய்யப் பட்டது.


Body:திருப்பூர் மாவட்டம் ஓமலூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் ரங்கம்மாள் சகோதரிகள் இவர்கள் இருவருக்கும் உடல்நிலை சரியில்லாமல் போன சமயத்தில் இவரது பிள்ளைகள் பணம் ஏதாவது வைத்துள்ளார்கள் என்று கேட்க ஆம் எங்களது இறுதிக் காலத் தேவைக்காக வைத்திருப்பதாக கூறி அவர்களிடம் இருந்த 46 ஆயிரம் ரூபாய் பணத்தை கொடுத்து உள்ளனர் ஆனால் அதில் ஒரு ரூபாய் கூட செலவிட முடியாத நிலை காரணம் அந்த 46 ஆயிரம் ரூபாயும் பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் பணமதிப்பிழப்பு செய்யப்பட்டது அறியாமல் இருந்துள்ளனர் இந்த இரு மூதாட்டிகள் தங்களுடைய இறுதிக் காலத் தேவைக்காக பல்வேறு வேலைகளுக்கு சென்று சிறுக சிறுக சேமித்த பணம் இப்படி செல்லாமல் ஆகிவிட்டதாக வேதனை தெரிவிக்கின்றனர் இதனை அறிந்த மாவட்ட ஆட்சியர் கொண்டிருக்கும் இன்று அரசின் சார்பில் உதவிகளை செய்தார் பிறகு செய்தியாளர்களிடம் பேட்டியளித்த மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் பணமதிப்பிழப்பு செய்தது தெரியாமல் உதடுகள் வைத்திருந்த 46 ஆயிரம் ரூபாய் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் பணத்தை வங்கிகள் மூலம் மாற்ற முடியாது என தெரிவித்தார் மருத்துவ சிகிச்சை தேவைப்படும் மூதாட்டிக்கு அரசு சார்பில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் இரு மூதாட்டிகளுக்கும் அரசின் சார்பில் மாதாமாதம் முதியோர் உதவித்தொகை கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.