ETV Bharat / state

வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞர்கள் இருவர் கைது! - tirupattur chain snatching

திருப்பத்தூர்: வழிப்பறியில் ஈடுபட்ட இரண்டு இளைஞர்களைக் காவலர்கள் கைதுசெய்து, அவர்களிடமிருந்து தங்கச் செயின், செல்போன் ஆகியவற்றைப் பறிமுதல் செய்துள்ளனர்.

திருப்பத்தூர் செய்திகள்  திருப்பத்தூர் செயின் பறிமுதல்  thirupathur news  tirupattur chain snatching  திருப்பத்தூர் வழிப்பறி
வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞர்கள் இருவர் கைது
author img

By

Published : Jul 18, 2020, 4:58 PM IST

வேலூரிலுள்ள நேதாஜி மார்க்கெட்டில் பணிபுரிந்துவரும் சுப்பிரமணி என்பவரிடம் நேற்றிரவு அடையாளம் தெரியாத நபர்கள் இரண்டு பேர் கத்தியைக் காட்டி மிரட்டி ஒரு தங்க செயின், செல்போன் ஆகியவற்றைப் பறித்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து நேதாஜி மார்க்கெட் வியாபாரிகள் வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

திருப்பத்தூர் செய்திகள்  திருப்பத்தூர் செயின் பறிமுதல்  thirupathur news  tirupattur chain snatching
வழிப்பறிக் கொள்ளையர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட தங்கச் சங்கிலி, செல்போன்

புகாரையடுத்து விரைந்து செயல்பட்ட காவல் துறையினர், வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட தோட்டப்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஜவகர் ராஜ்(21), அஜய்(21) ஆகிய இரண்டு இளைஞர்களைக் கைதுசெய்து அவர்களிடமிருந்து இரண்டு சவரன் தங்கச் சங்கிலியையும் செல்போனையும் பறிமுதல் செய்தனர். மேலும், இவர்களை 15 நாள்கள் நீதிமன்றக் காவலில் வேலூர் சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: வீட்டில் பதுக்கி வைத்து கஞ்சா விற்பனை - இருவர் கைது; 9.5 கிலோ கஞ்சா பறிமுதல்!

வேலூரிலுள்ள நேதாஜி மார்க்கெட்டில் பணிபுரிந்துவரும் சுப்பிரமணி என்பவரிடம் நேற்றிரவு அடையாளம் தெரியாத நபர்கள் இரண்டு பேர் கத்தியைக் காட்டி மிரட்டி ஒரு தங்க செயின், செல்போன் ஆகியவற்றைப் பறித்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து நேதாஜி மார்க்கெட் வியாபாரிகள் வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

திருப்பத்தூர் செய்திகள்  திருப்பத்தூர் செயின் பறிமுதல்  thirupathur news  tirupattur chain snatching
வழிப்பறிக் கொள்ளையர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட தங்கச் சங்கிலி, செல்போன்

புகாரையடுத்து விரைந்து செயல்பட்ட காவல் துறையினர், வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட தோட்டப்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஜவகர் ராஜ்(21), அஜய்(21) ஆகிய இரண்டு இளைஞர்களைக் கைதுசெய்து அவர்களிடமிருந்து இரண்டு சவரன் தங்கச் சங்கிலியையும் செல்போனையும் பறிமுதல் செய்தனர். மேலும், இவர்களை 15 நாள்கள் நீதிமன்றக் காவலில் வேலூர் சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: வீட்டில் பதுக்கி வைத்து கஞ்சா விற்பனை - இருவர் கைது; 9.5 கிலோ கஞ்சா பறிமுதல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.