ETV Bharat / state

காவல் நிலையம் எதிரே 10 ஆடுகளுக்கு விஷம் வைத்த மர்மநபர், 7 ஆடுகள் பரிதாப பலி! - crime

திருவள்ளூர்: திருத்தணி மகளிர் காவல் நிலையத்திற்கு எதிரில் மேய்ந்துகொண்டிருந்த 10 ஆடுகளுக்கு அடையாளம் தெரியாத நபர் விஷம் வைத்ததில், அந்த இடத்திலேயே 7 ஆடுகள் இறந்துவிட்டன. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

Thiruthani
author img

By

Published : Mar 29, 2019, 12:04 PM IST

திருவள்ளூர் மவாட்டம் திருத்தணி நகராட்சிக்குட்பட்ட மேல்திருத்தணி பகுதியில் வசித்துவருபவர் ஜலீல்(40). இவர் ஆடு வளர்க்கும் தொழில் செய்துவருகிறார். இவர் தனது 10 ஆடுகளை நேற்று (மார்ச் 28) காலை திருத்தணி பொதட்டூர்பேட்டை சாலையில் உள்ள மகளிர் காவல் நிலையம் எதிரே புல் மேய வைத்துக்கொண்டு இருந்தார்.

இந்நிலையில், தீடிரென ஆடுகள் ஒவ்வொன்றாக மயங்கி விழுவதைக்கண்டு ஜலீல் அதிர்ச்சியடைந்தார். திடீரென 7 ஆடுகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டன. மேலும், மூன்று ஆடுகள் உயிருக்குப் போராடியது. இதனைக்கண்ட உரிமையாளர் அந்த இடத்திலேயே கதறி அழுதுள்ளார்.

திருத்தணி காவல் நிலையம் எதிரில் 7 ஆடுகள் பலி

மகளிர் காவல் நிலையம் அருகே மேய்ந்துகொண்டிருக்கும் ஆடுகளுக்கு விஷம் வைத்த அடையாளம் தெரியாத நபர் யார், அதிலும் கொடிய விஷமான எலி மருந்தை ஆடுகளுக்கு வைத்துள்ளனரே என அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர். திருத்தணி காவல் நிலையத்தில் தனது ஆடுகளுக்கு விஷம் வைத்த அடையாளம் தெரியாத நபரைக் கண்டுபிடித்துத் தருமாறு ஆடுகளின் உரிமையாளர் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருவள்ளூர் மவாட்டம் திருத்தணி நகராட்சிக்குட்பட்ட மேல்திருத்தணி பகுதியில் வசித்துவருபவர் ஜலீல்(40). இவர் ஆடு வளர்க்கும் தொழில் செய்துவருகிறார். இவர் தனது 10 ஆடுகளை நேற்று (மார்ச் 28) காலை திருத்தணி பொதட்டூர்பேட்டை சாலையில் உள்ள மகளிர் காவல் நிலையம் எதிரே புல் மேய வைத்துக்கொண்டு இருந்தார்.

இந்நிலையில், தீடிரென ஆடுகள் ஒவ்வொன்றாக மயங்கி விழுவதைக்கண்டு ஜலீல் அதிர்ச்சியடைந்தார். திடீரென 7 ஆடுகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டன. மேலும், மூன்று ஆடுகள் உயிருக்குப் போராடியது. இதனைக்கண்ட உரிமையாளர் அந்த இடத்திலேயே கதறி அழுதுள்ளார்.

திருத்தணி காவல் நிலையம் எதிரில் 7 ஆடுகள் பலி

மகளிர் காவல் நிலையம் அருகே மேய்ந்துகொண்டிருக்கும் ஆடுகளுக்கு விஷம் வைத்த அடையாளம் தெரியாத நபர் யார், அதிலும் கொடிய விஷமான எலி மருந்தை ஆடுகளுக்கு வைத்துள்ளனரே என அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர். திருத்தணி காவல் நிலையத்தில் தனது ஆடுகளுக்கு விஷம் வைத்த அடையாளம் தெரியாத நபரைக் கண்டுபிடித்துத் தருமாறு ஆடுகளின் உரிமையாளர் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Intro:திருத்தணி நகர பகுதியில் மகளிர் காவல் நிலையம் எதிரில் 10 ஆடுகளுக்கு விஷம் வைத்த மர்ம நபர் 7 ஆடுகள் இறந்து விட்டது திருத்தணி போலீசார் விசாரணை.


Body:திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகராட்சிக்கு உட்பட்ட மேல் திருத்தணி பகுதியில் வசிப்பவர் ஜலீல் வயது 40 இவர் ஆடு மேய்க்கும் ஆடு வளர்க்கும் தொழில் செய்து வருகிறார் இவரது ஆடுகள் இன்று காலை திருத்தணி பொதட்டூர்பேட்டை சாலையில் உள்ள மகளிர் காவல் நிலையம் எதிரில் இவரது 10 ஆடுகளை மேய்ப்பதற்காக அங்கே வைத்துக் கொண்டு இருந்தார் அப்போது ஆடுகளை மேய்த்துக் கொண்டிருக்கும் போது இவர் சிறிது தூரம் அமர்ந்திருந்தார் அந்நிலையில் ஆடுகள் ஒவ்வொன்றாக மயங்கி விழுவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார் திடீரென 7 ஆடுகள் அதே இடத்தில் இறந்து விட்டது மூன்று ஆடுகள் உயிருக்கு போராடியது இதனை கண்ட அந்த பகுதி பொதுமக்கள் மகளிர் காவல் நிலையம் எதிரே மேய்ந்து கொண்டிருந்த ஆடுகளுக்கு விஷம் வைத்த மர்ம நபர் யார் இதிலும் கொடிய விஷமான எலி மருந்தை ஆடுகளுக்கு வைத்துள்ளனர் இதனை பொதுமக்கள் கண்டதும் அதிர்ச்சி அடைந்தனர் ஆடுகளுக்கு சொந்தக்காரர் ஆடுகளுக்கு முன்பு அமர்ந்து கதறி அழுதார் ஆடுகளுக்கு சொந்தக்காரர் திருத்தணி காவல் நிலையத்தில் தனது ஆடுகளுக்கு விஷம் வைத்த மர்ம நபரை கண்டுபிடித்து தருமாறு புகார் அளித்துள்ளார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து கொண்டு திருத்தணி போலீசார் ஆடுகளுக்கு விஷம் வைத்து மர்மநபருக்கு வலை வீசி தேடி வருகின்றனர்.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.