ETV Bharat / state

திருவள்ளூர் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

author img

By

Published : Oct 31, 2020, 12:27 AM IST

திருவள்ளூர் : கிருஷ்ணாபுரம் அம்மம்பள்ளி அணையிலிருந்து 600 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளதால், மாவட்டத்தின் கரையோரப் பகுதிகளுக்கு மாவட்ட ஆட்சியர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அம்மம்பள்ளி அணையிலிருந்து 600 கன அடி நீர் திறப்பு: திருவள்ளூர் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
Flood warning to people

ஆந்திர மாநிலம், கிருஷ்ணாபுரம், அம்மம்பள்ளி அணையிலிருந்து 600 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. நேற்று (அக்.30) இரவு 9.30 மணி தொடங்கி இன்று (அக்.31) அதிகாலை நான்கு மணிவரை தண்ணீர் வெளியேற்றப்பட உள்ளது.

மேலும், அங்கு பெய்து வரும் தொடர்மழையின் காரணமாக தண்ணீர் அளவு உயர வாய்ப்புள்ளது. இந்தத் தண்ணீர் நகரின் ஆற்றின் வழியாக பூண்டி அணை வரை வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால், திருவள்ளூர் மாவட்டம், கொசஸ்தலை ஆறு, திருத்தணி, பள்ளிப்பட்டு வட்டங்களைச் சேரந்த கரையோர மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் பொன்னையா வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆந்திர மாநிலம், கிருஷ்ணாபுரம், அம்மம்பள்ளி அணையிலிருந்து 600 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. நேற்று (அக்.30) இரவு 9.30 மணி தொடங்கி இன்று (அக்.31) அதிகாலை நான்கு மணிவரை தண்ணீர் வெளியேற்றப்பட உள்ளது.

மேலும், அங்கு பெய்து வரும் தொடர்மழையின் காரணமாக தண்ணீர் அளவு உயர வாய்ப்புள்ளது. இந்தத் தண்ணீர் நகரின் ஆற்றின் வழியாக பூண்டி அணை வரை வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால், திருவள்ளூர் மாவட்டம், கொசஸ்தலை ஆறு, திருத்தணி, பள்ளிப்பட்டு வட்டங்களைச் சேரந்த கரையோர மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் பொன்னையா வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.