திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே பெரியகுப்பம் பகுதியில் கடந்த மாதம் புதியதாக ஒரு டாஸ்மாக் மதுபானக்கடை தொடங்கப்பட்டது. அதனை எதிர்த்து அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர். இருந்தும் தொடர்ந்து டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது.
இந்நிலையில், இன்று அதனருகில் மற்றொரு மதுபானக்கடை தொடங்கப்பட்டது. இதனை எதிர்த்து அப்பகுதி மக்கள் கடையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முற்றுகையிட்ட பெண்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி அந்த புதிய டாஸ்மாக் கடையை திறந்து வைத்தனர்.
இதுகுறித்து அப்பகுதிமக்கள் கூறுகையில், ஏற்கனவே இருக்கின்ற டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என்று வலியுறுத்திவந்த நிலையில், புதிதாக திறக்கப்பட்ட இந்த டாஸ்மாக் கடையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் என்றும், குடித்து விட்டு நிர்வாணமாக படுத்து தூங்குகிறார்கள், குழந்தைகள் செல்லக்கூடிய வழியில் குடிபோதையில் வாகனங்களை இயக்குகின்றனர், ஆகவே இந்த டாஸ்மாக் கடை இயக்கப்பட்டால் நாங்கள் வருகின்ற உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்கமாட்டோம் என்று அவர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:
பிணத்தை வைத்து அரசியல் செய்யும் கட்சி திமுக - அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்!