ETV Bharat / state

துணிக்கடையில் கத்தியை காட்டி பணம் பறித்த கும்பல் கைது

author img

By

Published : Dec 28, 2021, 8:12 AM IST

சின்ன ஈக்காடு பகுதியிலுள்ள துணிக்கடையில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த நான்கு பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

கைது
கைது

திருவள்ளூர்: சின்ன ஈக்காடு பகுதியில் வசித்து வருபவர் ஆனந்தன். இவரது மகன் பரத் (23) ஜெ.என்.சாலையிலுள்ள துணிக்கடையில் வேலை செய்து வருகிறார்.

பரத் வழக்கம் போல் நேற்று (டிசம்பர் 27) காலை வேலைக்கு சென்றிருந்தார். அப்போது முன்விரோதம் காரணமாக இவரை தனுஷ், விஜய், சூர்யா, விக்ரம் (18) ஆகிய நான்கு பேர் கத்தியை காட்டி மிரட்டி, இரும்பு பைப்புகளை கொண்டு தாக்கியுள்ளனர்.

மேலும் பரத், பணி செய்துவரும் துணிக்கடைக்குள் சென்று கத்தியை காட்டி மிரட்டி 1000 ரூபாய் பணத்தை எடுத்துச் சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து கடையின் உரிமையாளர் சதீஷ் (27), பரத் ஆகியோர் திருவள்ளூர் நகர காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

அதன் பேரில் வழக்கு பதிவு செய்த காவலர்கள், குற்ற செயல்களில் ஈடுபட்ட நான்கு பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: Gold jewellery theft: ஐடி ஊழியர் வீட்டில் 18 சவரன் நகை கொள்ளை

திருவள்ளூர்: சின்ன ஈக்காடு பகுதியில் வசித்து வருபவர் ஆனந்தன். இவரது மகன் பரத் (23) ஜெ.என்.சாலையிலுள்ள துணிக்கடையில் வேலை செய்து வருகிறார்.

பரத் வழக்கம் போல் நேற்று (டிசம்பர் 27) காலை வேலைக்கு சென்றிருந்தார். அப்போது முன்விரோதம் காரணமாக இவரை தனுஷ், விஜய், சூர்யா, விக்ரம் (18) ஆகிய நான்கு பேர் கத்தியை காட்டி மிரட்டி, இரும்பு பைப்புகளை கொண்டு தாக்கியுள்ளனர்.

மேலும் பரத், பணி செய்துவரும் துணிக்கடைக்குள் சென்று கத்தியை காட்டி மிரட்டி 1000 ரூபாய் பணத்தை எடுத்துச் சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து கடையின் உரிமையாளர் சதீஷ் (27), பரத் ஆகியோர் திருவள்ளூர் நகர காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

அதன் பேரில் வழக்கு பதிவு செய்த காவலர்கள், குற்ற செயல்களில் ஈடுபட்ட நான்கு பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: Gold jewellery theft: ஐடி ஊழியர் வீட்டில் 18 சவரன் நகை கொள்ளை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.