ETV Bharat / state

அரசு மாணவியர் விடுதிக்குள் அத்துமீறி நுழைந்து மாணவி கடத்தல் - கடமலைக்குண்டு அரசு மாணவியர் விடுதி

தேனி: அரசு மாணவியர் விடுதிக்குள் அத்துமீறி நுழைந்த நபர் மாணவி ஒருவரை கடத்தியதாகவும் அதற்கு விடுதி காவலர் துணை போவதாகவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மாணவிகள் புகார் மனு அளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கடமலைக்குண்டு அரசு மாணவியர் விடுதி மாணவிகள் புகார் மனு
author img

By

Published : Nov 7, 2019, 9:39 AM IST


தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள கடமலைக்குண்டு பகுதியில் அரசு கள்ளர் மாணவியர் விடுதி செயல்படுகிறது. இந்த விடுதியில் 50 மாணவிகள் தங்கி அப்பகுதியில் உள்ள அரசுப்பள்ளிகளில் படித்து வருகின்றனர். இந்நிலையில் கடமலைக்குண்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வரும் மாணவிகள் இருவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கடமலைக்குண்டு அரசு மாணவியர் விடுதி மாணவிகள் புகார் மனு

அந்த மனுவில், "விடுதி காப்பாளர் வீரலதா, சமையலர் நாகம்மாள் ஆகியோர் மாணவிகள் மீது எந்தவித அக்கறையையும் செலுத்துவதில்லை. காப்பாளரோ வாரத்திற்கு ஒரு முறை மட்டும் மொத்தமாக மாணவியர்களின் வருகையை பதிவு செய்கிறார். காவலர் இல்லாததால் இரவு நேரத்தில் சமூக விரோதிகள் சிலர் விடுதியில் நுழைந்து மாணவிகளை மிரட்டிச்செல்கின்றனர். இதன் காரணமாக தற்போது 15 மாணவிகள் மட்டுமே விடுதியில் தங்கியுள்ளனர்.

மேலும், கடந்த நவம்பர் 3ஆம் தேதி மாலை மணி என்பவர் விடுதிக்குள் அத்துமீறி நுழைந்து 12ஆம் வகுப்பு மாணவியை அடித்து துன்பறுத்தி, வலுக்கட்டாயமாக கடத்திச் சென்றுவிட்டார். எப்போதாவது விடுதிக்கு வரும் காப்பாளர் நேற்று வந்து மாணவி கடத்தப்பட்டது சம்பந்தமாக யாரிடமும் சொல்லக்கூடாது என எங்களை மிரட்டி வைக்கிறார். தற்போது வரை கடத்தப்பட்ட மாணவி என்னவானார், என எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை. எனவே உயிருக்கு அச்சுறுத்தலுடன் அரசு விடுதியில் வசித்து வரும் தங்களுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையும் படிங்க:

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை வன்புணர்வு செய்த சிறுவர்கள் - ஏர்வாடியில் நடந்த கொடூரம்!


தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள கடமலைக்குண்டு பகுதியில் அரசு கள்ளர் மாணவியர் விடுதி செயல்படுகிறது. இந்த விடுதியில் 50 மாணவிகள் தங்கி அப்பகுதியில் உள்ள அரசுப்பள்ளிகளில் படித்து வருகின்றனர். இந்நிலையில் கடமலைக்குண்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வரும் மாணவிகள் இருவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கடமலைக்குண்டு அரசு மாணவியர் விடுதி மாணவிகள் புகார் மனு

அந்த மனுவில், "விடுதி காப்பாளர் வீரலதா, சமையலர் நாகம்மாள் ஆகியோர் மாணவிகள் மீது எந்தவித அக்கறையையும் செலுத்துவதில்லை. காப்பாளரோ வாரத்திற்கு ஒரு முறை மட்டும் மொத்தமாக மாணவியர்களின் வருகையை பதிவு செய்கிறார். காவலர் இல்லாததால் இரவு நேரத்தில் சமூக விரோதிகள் சிலர் விடுதியில் நுழைந்து மாணவிகளை மிரட்டிச்செல்கின்றனர். இதன் காரணமாக தற்போது 15 மாணவிகள் மட்டுமே விடுதியில் தங்கியுள்ளனர்.

மேலும், கடந்த நவம்பர் 3ஆம் தேதி மாலை மணி என்பவர் விடுதிக்குள் அத்துமீறி நுழைந்து 12ஆம் வகுப்பு மாணவியை அடித்து துன்பறுத்தி, வலுக்கட்டாயமாக கடத்திச் சென்றுவிட்டார். எப்போதாவது விடுதிக்கு வரும் காப்பாளர் நேற்று வந்து மாணவி கடத்தப்பட்டது சம்பந்தமாக யாரிடமும் சொல்லக்கூடாது என எங்களை மிரட்டி வைக்கிறார். தற்போது வரை கடத்தப்பட்ட மாணவி என்னவானார், என எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை. எனவே உயிருக்கு அச்சுறுத்தலுடன் அரசு விடுதியில் வசித்து வரும் தங்களுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையும் படிங்க:

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை வன்புணர்வு செய்த சிறுவர்கள் - ஏர்வாடியில் நடந்த கொடூரம்!

Intro:          அரசு மாணவியர் விடுதியில் அடிப்படை வசதி, பாதுகாப்பு இல்லை என மாணவியர்கள் புகார்.          
ஆண்டிபட்டி அருகே உள்ள அரசு மாணவியர் விடுதியில் அடிப்படை வசதிகள், பாதுகாப்பு இல்லை என மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்த மாணவியர்கள்.
Body: தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள கடமலைக்குண்டு பகுதியில் அரசு கள்ளர் மாணவியர் விடுதி செயல்படுகிறது. இந்த விடுதியில் 50மாணவிகள் தங்கி அப்பகுதியில் உள்ள அரசுப்பள்ளிகளில் படித்து வருகின்றனர். இந்நிலையில் கடமலைக்குண்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வரும் மாணவிகள் இருவர் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
அந்த மனுவில், விடுதிக்காப்பாளர் வீரலதா, சமையலர் நாகம்மாள் ஆகியோர் ஏழை மாணவிகள் மீது எந்தவித அக்கறை செலுத்துவதில்லை. காப்பாளரோ வாரத்திற்கு ஒரு முறை மட்டும் மொத்தமாக மாணவியர்களின் வருகையை பதிவு செய்து கொள்வார். முட்டை, சிக்கன், மட்டன் என ஏதும் கொடுப்பதில்லை;, மேலும் அரசு நிர்ணயித்த அளவை விட குறைந்த அளவிலே சாப்பாடு வழங்குவார்கள். இதை விட கொடுமையானது, காவலர் இல்லாததால் இரவு நேரத்தில்; சமூக விரோதிகள் சிலர் விடுதியில் நுழைந்து மாணவிகளை மிரட்டிச்செல்கின்றனர். இதன் காரணமாக தற்போது 15மாணவிகள் மட்டுமே விடுதியில் தங்கியுள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக, கடந்த நவம்பர் 3ஆம் தேதி மாலை மணி என்பவர் விடுதிக்குள் அத்துமீறி நுழைந்து 12ஆம் வகுப்பு மாணவியை அடித்து துண்பறுத்தி, வலுக்கட்டாயமாக கடத்திச் சென்று விட்டார். இது சம்பந்தமாக அக்கம் பக்கம் உள்ளவர்கள் மூலம் தகவல் அளிக்கப்பட்டு சம்பந்தபட்ட மாணவியின் அம்மா விடுதிக்கு வந்து விசாரித்து விட்டு போனார். எப்போதாவது விடுதிக்கு வரும் காப்பாளர் நேற்று வந்து மாணவி கடத்தப்பட்டது சம்பந்தமாக யாரிடமும் சொல்லக்கூடாது என எங்களை மிரட்டி வைக்கிறார். தற்போது வரை கடத்தப்பட்ட மாணவி என்னவானார், என எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை.
எனவே உயிருக்கு அச்சுறுத்தலுடன் அரசு விடுதியில் வசித்து வரும் தங்களுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும், காப்பாளர், சமையலர் மற்றும் மாணவியை கடத்தியவர் அவருக்கு உறுதுணையாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Conclusion: உயிருக்கு பாதுகாப்பின்மை குறித்து அரசு விடுதி மாணவியர் அளித்த புகார் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.