ETV Bharat / state

"நிபா" வைரஸ்: எல்லைப் பகுதியில் தீவிர கண்காணிப்பு பணிகள் - full-swing

தேனி: நிபா வைரஸ் நோய் எதிரொலியால் தேனி மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு - கேரள எல்லைப்பகுதிகளில் மருத்துவக் கண்காணிப்புகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மருத்துவக்கண்காணிப்பு
author img

By

Published : Jun 6, 2019, 10:30 AM IST

2018ஆம் ஆண்டு கேரள மாநிலம் கோழிக்கோடு, மலப்புரம் மாவட்டங்களில் நிபா வைரஸால் 16 பேர் பரிதாபமாக பலியாகினர். இதனையடுத்து மருத்துவத் துறையினர் மேற்கொண்ட தீவர நடவடிக்கையால் இந்த வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டது.

இந்நிலையில், மீண்டும் கேரளப் பகுதிகளில் நிபா வைரஸ் அறிகுறிகள் தென்படுவதைத் தொடர்ந்து அதற்கான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஆனால், தமிழ்நாட்டில் நிபா வைரஸ் பற்றிய அறிகுறிகள் இதுவரை தென்படவில்லை. இருந்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தமிழ்நாடு – கேரள எல்லைப் பகுதிகளில், மருத்துவக்குழுவினர் கேரளாவிலிருந்து வருபவர்களையும், வாகனங்களையும் சோதனை செய்து வாகனங்களுக்குக் கிருமிநாசினி மருந்து அடிக்க சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

எல்லைப் பகுதியில் தீவிர கண்காணிப்பு பணிகள்

இதற்காக, தேனி மாவட்ட எல்லைப்பகுதிகளான கம்பம் மெட்டு பழைய சோதனைச்சாவடி, லோயர்கேம்ப் பேருந்து நிலையம், போடி மெட்டு முந்தல் ஆகிய பகுதிகளில் தேனி பொதுச் சுகாதாரம், நோய்த் தடுப்பு மருத்துவத்துறை சார்பில் மருத்துவக் குழு அமைக்கப்பட்டு வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

2018ஆம் ஆண்டு கேரள மாநிலம் கோழிக்கோடு, மலப்புரம் மாவட்டங்களில் நிபா வைரஸால் 16 பேர் பரிதாபமாக பலியாகினர். இதனையடுத்து மருத்துவத் துறையினர் மேற்கொண்ட தீவர நடவடிக்கையால் இந்த வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டது.

இந்நிலையில், மீண்டும் கேரளப் பகுதிகளில் நிபா வைரஸ் அறிகுறிகள் தென்படுவதைத் தொடர்ந்து அதற்கான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஆனால், தமிழ்நாட்டில் நிபா வைரஸ் பற்றிய அறிகுறிகள் இதுவரை தென்படவில்லை. இருந்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தமிழ்நாடு – கேரள எல்லைப் பகுதிகளில், மருத்துவக்குழுவினர் கேரளாவிலிருந்து வருபவர்களையும், வாகனங்களையும் சோதனை செய்து வாகனங்களுக்குக் கிருமிநாசினி மருந்து அடிக்க சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

எல்லைப் பகுதியில் தீவிர கண்காணிப்பு பணிகள்

இதற்காக, தேனி மாவட்ட எல்லைப்பகுதிகளான கம்பம் மெட்டு பழைய சோதனைச்சாவடி, லோயர்கேம்ப் பேருந்து நிலையம், போடி மெட்டு முந்தல் ஆகிய பகுதிகளில் தேனி பொதுச் சுகாதாரம், நோய்த் தடுப்பு மருத்துவத்துறை சார்பில் மருத்துவக் குழு அமைக்கப்பட்டு வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சுப.பழனிக்குமார் - தேனி.            05.06.2019.

       நிபா வைரஸ் நோய் எதிரொலியால் தேனி மாவட்டத்தில் உள்ள தமிழக - கேரள எல்லைப்பகுதிகளில் மருத்துவக்கண்காணிப்புகள் தீவிரம்.

கடந்த ஆண்டு  கேரள மாநிலம் கோழிக்கோடு, மலப்புரம் மாவட்டங்களில் ஏராளமானோர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 10 க்கு மேற்பட்டோர் பரிதாபமாக இறந்தனர். மேலும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் ரத்த மாதிரி புனே தேசிய ஆய்வு கூடத்தில் ஆய்வு செய்த போது இந்த காய்ச்சலுக்கு ~நிபா| என்ற கொடிய வைரஸ் காரணம் என்பது தெரியவந்தது. இதனையடுத்து மருத்துவ துறையினர் மேற்கொண்ட தீவர நடவடிக்கையால் இந்த வைரஸ் கட்டுபடுத்தப்பட்டது.  

   இந்நிலையில் மீண்டும் கேரளப் பகுதிகளில் நிபா வைரஸ் அறிகுறிகள் தென்படுவதை தொடர்ந்து அதற்கான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால் தமிழகத்தில் நிபா வைரஸ் பற்றிய அறிகுறிகள் இதுவரை தென்படவில்லை. இருந்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழககேரள எல்லைப் பகுதிகளில், மருத்துவக்குழுவினர் கேரளாவில் இருந்து வருபவர்களையும், வாகனங்களையும் சோதனை செய்து வாகனங்களுக்கு கிருமிநாசினி மருந்து அடிக்க தமிழக சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

    இதற்காக தேனி மாவட்ட எல்லைப்பகுதிகளான கம்பம் மெட்டு பழைய சோதனைச்சாவடி, லோயர்கேம்ப் பஸ்நிலையம், போடி மெட்டு முந்தல் ஆகிய பகுதிகளில் தேனி பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை சார்பில் மருத்துவ குழு அமைக்கப்பட்டு இன்று முதல் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கம்பம் மெட்டு பழைய சோதனைச்சாவடி பகுதியில் புதுப்பட்டி சுகாதார ஆய்வாளர் தலைமையிலும், லோயர்கேம்ப் பஸ்டாண்டு பகுதியில் கூடலூர் சுகாதார களமேற்பார்வையாளர் தலைமையிலும் மருத்துவக்குழுவினர் தீவர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் போடிமெட்டு  பகுதியிலும் கேரளாவிலிருந்து வாகனங்களில் வருபவர்களிடம் காய்ச்சல் உண்டா என சோதனை செய்கின்றனர். மேலும் வாகனங்களுக்கு தொற்றுநோய் கிருமிநாசினி மருந்து அடித்து வருகின்றனர்.

   நிபா வைரஸ் நோய் பழந்தின்னி வவ்வால்கள் மூலம் பரவுகிறது. எனவே அணில், வவ்வால்கள் கடித்த பழங்களை சாப்பிடக்கூடாது என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். பலாப்பழம், கொய்யாப்பழம், மாம்பழம் போன்றவற்றை சுத்தமாக கழுவிய பிறகு தான் சாப்பிட வேண்டும். மேலும், காய்ச்சல், தலைவலி, தலைசுற்றல் போன்றவை ஏற்ப்பட்டால்  உடனடியாக அருகே உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திலே அல்லது அரசு மருத்துவமகை;கு சென்று சிகிச்சை மேற்கொள்ளுமாறு பொதுமக்களை மருத்துவர்கள் அறிவுறுத்திவருகின்றனர்.

Visuals sent FTP.

Slug Name As:

1)      TN_TNI_02_05_NIPHA VIRUS ECHO TN KL BORDERS CHECKING_VIS_7204333

2)      TN_TNI_02a_05_NIPHA VIRUS ECHO TN KL BORDERS CHECKING_VIS_7204333

3)      TN_TNI_02b_05_NIPHA VIRUS ECHO TN KL BORDERS CHECKING_SCRIPT_7204333

 

 

Thanks & Regards,

Suba.Palanikumar

Reporter - Theni District,

ETV Bharat. 

Mobile : 63049994707

 

Description: images

 

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.