ETV Bharat / state

நீலகிரியில் அறிமுகமானது தண்ணீர் ஏடிஎம்! - தண்ணீர் ஏடிஎம்

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் நேற்று முதல் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள் மற்றும் குளிர்பான பாட்டிகள் பயன்படுத்த தடை விதிக்கபட்டுள்ளதை அடுத்து பணம் செலுத்தி குடிநீர் பிடிக்கும் தண்ணீர் ஏடிஎம் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் இன்னசன்ட் திவ்யா தொடங்கி வைத்தார்.

தண்ணீர் ஏடிஎம்
author img

By

Published : Sep 2, 2019, 11:23 AM IST


நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் குடிநீர் பிளாஸ்டிக் பாட்டில்களை வனப்பகுதிகள் மற்றும் நீர் நிலைகளில் வீசி செல்வதால் பல்வேறு சுகாதார சீர்கேடுகள் ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பாட்டில்களை பயன்படுத்த நேற்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களுக்கு தடை விதிக்கபட்டுள்ளதை அடுத்து அம்மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு குடிநீர் கிடைக்கும் விதமாக 68 இடங்களில் தண்ணீர் ஏடிஎம்கள் பொறுத்தபட்டுள்ளன. இந்த திட்டத்தை அம்மாவட்ட ஆட்சியர் இன்னசன்ட் திவ்யா தொடங்கி வைத்தார்.

தண்ணீர் ஏடிஎம்

இந்த தண்ணீர் ஏடிஎம்களில் 5 ரூபாய், 2 ரூபாய், 1 ரூபாய் என நாணயங்களை செலுத்தி குடிநீர் நிரப்பிக் கொள்ள முடியும். நீலகிரி மாவட்டத்திற்கு தடையை மீறி பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களை எடுத்து வருவபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் குடிநீர் பிளாஸ்டிக் பாட்டில்களை வனப்பகுதிகள் மற்றும் நீர் நிலைகளில் வீசி செல்வதால் பல்வேறு சுகாதார சீர்கேடுகள் ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பாட்டில்களை பயன்படுத்த நேற்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களுக்கு தடை விதிக்கபட்டுள்ளதை அடுத்து அம்மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு குடிநீர் கிடைக்கும் விதமாக 68 இடங்களில் தண்ணீர் ஏடிஎம்கள் பொறுத்தபட்டுள்ளன. இந்த திட்டத்தை அம்மாவட்ட ஆட்சியர் இன்னசன்ட் திவ்யா தொடங்கி வைத்தார்.

தண்ணீர் ஏடிஎம்

இந்த தண்ணீர் ஏடிஎம்களில் 5 ரூபாய், 2 ரூபாய், 1 ரூபாய் என நாணயங்களை செலுத்தி குடிநீர் நிரப்பிக் கொள்ள முடியும். நீலகிரி மாவட்டத்திற்கு தடையை மீறி பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களை எடுத்து வருவபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Intro:OotyBody:உதகை 01-09-19
நீலகிரி மாவட்டத்தில் இன்று முதல் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள் மற்றும் குளிர்பான பாட்டிகள் பயன்படுத்த தடை விதிக்கபட்டுள்ளதை அடுத்து பணம் செலுத்தி குடிநீர் பிடிக்கும் தண்ணீர் ஏடிஎம் திட்டத்தை மாவட்ட ஆட்சிதலைவர் தொடங்கி வைத்தார்.

நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் எடுத்து வரும் குடிநீர் பிளாஸ்டிக் பாட்டில்களை வனபகுதிகள் மற்றும் நீர் நிலைகளில் வீசி செல்வதால் பல்வேறு சுகாதார சீர்கேடுகள் ஏற்பட்டு வருகிறது. இதனையடுத்து பிளாஸ்டிக் குடிநீர் பாட்டிகள் மற்றும் குளிர்பான பாட்டில்களை நீலகிரி மாவட்டத்தில் பயன்படுத்த இன்று முதல் தடை விதிக்கபட்டுள்ளது. பிளாஸ்டிக் குடிநீர் பாட்டிகளுக்கு தடை விதிக்கபட்டுள்ளதை அடுத்து மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு குடிநீர் கிடைக்கும் விதமாக 68 இடங்களில் தண்ணீர் ஏடிஎம்கள் பொறுத்தபட்டுள்ளன.
நெடுஞ்சாலை மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஓரங்களிலும், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட மக்கள் கூடும் முக்கிய இடங்களிலும் இந்த தண்ணீர் ஏடிஎம்கள் பொறுத்தபட்டுள்ளன. இந்த நிலையில் தண்ணீர் ஏடிஎம் திட்டத்தை மாவட்ட ஆட்சிதலைவர் இன்னசன்ட் திவ்யா இன்று தொடங்கி வைத்தார். இந்த தண்ணீர் ஏடிஎம்களில் 5 ரூபாய், 2 ரூபாய், 1 ரூபாய் என நாணயங்களை செலுத்தி குடிநீர் பிடித்து கொள்ள முடியும். 5 ரூபாய் நாணயத்தை செலுத்தி ஒரு லிட்டர் குடிநீரை பெற்று கொள்ள முடியும். இதனிடையே தடையை மீறி பிளாஸ்டிக் குடிநீர் பாட்டிகளை நீலகிரி மாவட்டத்திற்கு எடுத்து வருவதை கண்காணிக்கபடும் என்றும் மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கபடும் எனவும் மாவட்ட ஆட்சிதலைவர் எச்சரிக்கைவிடுத்துள்ளார்.
பேட்டி: இன்னசென்ட் திவ்யா – நிலகிரி மாவட்ட ஆட்சிதலைவர்.Conclusion:Ooty
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.