ETV Bharat / state

சமரசமாக முடிந்தது அமைச்சரின் காலணி சர்ச்சை - Slipper Issue lastest

நீலகிரி: பழங்குடி சிறுவனை காலணி கழற்ற வைத்த விவகாரத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனிடம், அச்சிறுவனின் குடும்பத்தினர் சமரசம் அடைந்தனர்.

TN Minister DIndigul srinivasan, slipper issue, செருப்பு சர்ச்சை, செருப்பு விகாரம்,
TN Minister DIndigul srinivasan
author img

By

Published : Feb 8, 2020, 1:24 PM IST

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள வளர்ப்பு யானைகளுக்கு புத்துணர்வு முகாம் நேற்று முன்தினம் (பிப். 06) நடைபெற்றது. இதைத் தொடக்கி வைப்பதற்காக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சென்றார்.

அப்போது அமைச்சர், ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, அரசு அலுவலர்கள் ஆகியோர் அங்குள்ள கோயிலில் நடைபெற்ற பூஜையில் கலந்துகொண்டார். இதனிடையே, கோயிலுக்குள் செல்வதற்கு முன்பு தான் அணிருந்த காலணிகளை கழற்றுமாறு அருகிலிருந்த பழங்குடியின சிறுவனிடம் கூறினார்.

இந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, பழங்குடியினர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட போவதாகவும் உடனடியாக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், பாதிக்கப்பட்ட சிறுவனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினர். இதனிடையே, யார் மனதையும் புண்படுத்த நினைக்கவில்லை என்றும் தனது பேரன் போல் இருந்ததாலேயே அச்சிறுவனை அழைத்து காலணியை கழற்றுமாறு கூறியதாக அமைச்சர் சீனிவாசன் விளக்கமளித்தார்.

இந்நிலையில், தெப்பக்காட்டைச் சேர்ந்த சிறுவனின் குடும்பத்தினர் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட பழங்குடியினர், உதகையில் உள்ள தமிழ்நாடு மாளிகையில் தங்கியிருந்த அமைச்சரை காண வருந்திருந்தனர்.

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனை சந்திக்க வரும் பழங்குடியினர்

அப்போது வனத்துறை அமைச்சர், ஆட்சியர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜூன், மாவட்ட செயலாளர் புத்திசந்திரன் ஆகியோர் பழங்குடியின மக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு சமரசம் செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வனத்துறை அமைச்சர், இந்த சம்பவம் உள்நோக்கத்துடன் நடந்தது இல்லை. பழங்குடியின மக்கள் பல கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்கள் அளித்தனர். அதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேட்டி

இதனிடையே சிறுவனின் தாயார் செய்தியாளர்களிடம் பேசும்போது, "வனத்துறை அமைச்சர் எங்களை சந்திக்க அழைத்தார். அதன்படி எங்களது குடும்பம், ஊர்மக்களுடன் இங்கு வந்தோம். இந்த சம்பவத்துக்கு அமைச்சர் வருத்தம் தெரிவித்தார். அவர் மீது மசினகுடி காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகாரை திரும்பப் பெறுகிறோம்" என்றார்.

பாதிக்கப்பட்ட சிறுவனின் தாயார் செய்தியாளர் சந்திப்பு

இதையும் படிங்க : 'மதவாதிகளால்தான் காந்தி சுட்டுக்கொல்லப்பட்டார்'- கேரள நிதி அமைச்சர்

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள வளர்ப்பு யானைகளுக்கு புத்துணர்வு முகாம் நேற்று முன்தினம் (பிப். 06) நடைபெற்றது. இதைத் தொடக்கி வைப்பதற்காக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சென்றார்.

அப்போது அமைச்சர், ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, அரசு அலுவலர்கள் ஆகியோர் அங்குள்ள கோயிலில் நடைபெற்ற பூஜையில் கலந்துகொண்டார். இதனிடையே, கோயிலுக்குள் செல்வதற்கு முன்பு தான் அணிருந்த காலணிகளை கழற்றுமாறு அருகிலிருந்த பழங்குடியின சிறுவனிடம் கூறினார்.

இந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, பழங்குடியினர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட போவதாகவும் உடனடியாக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், பாதிக்கப்பட்ட சிறுவனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினர். இதனிடையே, யார் மனதையும் புண்படுத்த நினைக்கவில்லை என்றும் தனது பேரன் போல் இருந்ததாலேயே அச்சிறுவனை அழைத்து காலணியை கழற்றுமாறு கூறியதாக அமைச்சர் சீனிவாசன் விளக்கமளித்தார்.

இந்நிலையில், தெப்பக்காட்டைச் சேர்ந்த சிறுவனின் குடும்பத்தினர் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட பழங்குடியினர், உதகையில் உள்ள தமிழ்நாடு மாளிகையில் தங்கியிருந்த அமைச்சரை காண வருந்திருந்தனர்.

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனை சந்திக்க வரும் பழங்குடியினர்

அப்போது வனத்துறை அமைச்சர், ஆட்சியர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜூன், மாவட்ட செயலாளர் புத்திசந்திரன் ஆகியோர் பழங்குடியின மக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு சமரசம் செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வனத்துறை அமைச்சர், இந்த சம்பவம் உள்நோக்கத்துடன் நடந்தது இல்லை. பழங்குடியின மக்கள் பல கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்கள் அளித்தனர். அதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேட்டி

இதனிடையே சிறுவனின் தாயார் செய்தியாளர்களிடம் பேசும்போது, "வனத்துறை அமைச்சர் எங்களை சந்திக்க அழைத்தார். அதன்படி எங்களது குடும்பம், ஊர்மக்களுடன் இங்கு வந்தோம். இந்த சம்பவத்துக்கு அமைச்சர் வருத்தம் தெரிவித்தார். அவர் மீது மசினகுடி காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகாரை திரும்பப் பெறுகிறோம்" என்றார்.

பாதிக்கப்பட்ட சிறுவனின் தாயார் செய்தியாளர் சந்திப்பு

இதையும் படிங்க : 'மதவாதிகளால்தான் காந்தி சுட்டுக்கொல்லப்பட்டார்'- கேரள நிதி அமைச்சர்

Intro:OotyBody:உதகை 07-02-20

சமரசமாக முடிவடைந்த அமைச்சரின் செருப்பு விவகாரம்.


நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள வளர்ப்பு யானைகளுக்கு புத்துணர்வு முகாம் நேற்று நடைபெற்றது. இதனை துவக்கி வைப்பதற்காக தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வருகை புரிந்தார். முகாமிற்கு வந்தவர் முதல் நிகழ்வாக முகாமில் உள்ள கோவிலில் யானைகள் பூஜை செய்வதை பார்ப்பதற்கும் பூஜையில் கலந்து கொள்ளவும் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா மற்றும் அரசு அதிகாரிகளுடன் வந்தார். அப்போது அணிந்திருந்த செருப்பை கழற்ற அருகில் இருந்த பழங்குடியின இனத்தை சேர்ந்த கேத்தன் என்ற சிறுவனை அழைத்து தான் அணிந்திருக்கும் செருப்ப கழற்ற கூறினார். இச்சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் பழங்குடியினர் சங்கத்தினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட போவதாகவும் உடனடியாக வனத்துறை அமைச்சர் சிறுவனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் வலியுறுத்தியது. இந்நிலையில் நேற்று மாலை வனத்துறை அமைச்சர், யார் மனதையும் புண்படுத்த நினைக்கவில்லை என்றும் தனது பேரன் போல் உள்ள காரணத்தால் மட்டுமே அச்சிறுவனை அழைத்து தான் அணிந்திருந்த காலணியை கழட்டுமாறு கூறியதாகவும் தெரிவித்தார். இந்நிலையில் தெப்பக்காடை சேர்ந்த கேத்தன் குடும்பத்தார் மற்றும் பழங்குடியின மக்களை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் உத கையில் உள்ள தமிழக மாளிகையில் தங்கியுள்ள அமைச்சரை காண வருகை புரிந்தனர். பிறகு தமிழக வனத்துறை அமைச்சர், மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, முன்னாள் எம்.பி. அர்ஜீனன் மற்றும் மாவட்ட செயலாளர் புத்திசந்திரன் ஆகியோர் பழங்குடியின மக்களுடன் பேச்சுவார்த்தை நடைப்பெற்றது. பழங்குடியின தலைவர்கள் மற்றும் மக்களுடன் பேச்சுவார்த்தை சமரமாக முடிவடைந்தது.
பேச்சுவார்த்தைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வனத்துறை அமைச்சர் - நேற்று நடந்த சம்பவம் உள்நோக்கத்துடன் நடந்தது இல்லை எனவும், பழங்குடியின மக்களை சந்தித்த போது அச்சிறுவன் அவனது தாயார் மற்றும் பழங்குடியின மக்கள் இருந்ததாக தெரிவித்தார். மேலும் பழங்குடியின மக்கள் பல கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்களை அளித்தனர் எனவும் அதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கபடும் என தெரிவித்தார்.
கேத்தனின் தாயார் செய்தியாளர்களிடம் பேசும் போது – வனத்துறை அமைச்சர் தங்களை சந்திக்க அழைத்ததாகவும், அதன்படி தங்களது குடும்பம் மற்றும் ஊர்மக்கள் வந்ததாகவும் தெரிவித்தார். அங்கு பேசிய அமைச்சர் நேற்று நடைப்பெற்ற சம்பவத்திற்கு வருத்தம் தெரிவிப்பதுடன் மன்னிப்பும் கேட்;டு கொண்டார் என தெரிவித்தனர். மேலும் அமைச்சர் மீது நேற்று மசினகுடி காவல்நிலையத்தில் கொடுக்கபட்ட புகார் கொடுக்கபட்டிருந்த நிலையில் தற்போது திரும்ப பெருவதாகவும் தெரிவித்தார்.

பேட்டி : 1.திண்டுக்கல் சீனிவாசன் - வனத்துறை அமைச்சர்.
2. காளியம்மாள்- கேத்தனின் தாயார்.Conclusion:Ooty
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.