ETV Bharat / state

உதகையில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.50 அபராதம் - Nilgiris District News

நீலகிரி: உதகையில் முகக்கவசம் அணியாமல் சுற்றியவர்களுக்கு வட்டாட்சியர் ரூ.50 அபராதம் விதித்து எச்சரித்து அனுப்பினார்.

ரூ.50 அபராதம் விதித்த வட்டாட்சியர்
ரூ.50 அபராதம் விதித்த வட்டாட்சியர்
author img

By

Published : Jun 10, 2020, 5:20 PM IST

கரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அதையடுத்து தற்போது ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியேறும்போது கட்டாயமாக முகக்கவசம் அணிந்து வர அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ரூ.50 அபராதம் விதித்த வட்டாட்சியர்

இந்த நிலையில், நீலகிரி மாவட்டம் உதகை பகுதியில் வட்டாட்சியர் ரவிக்குமார் முகக்கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு 50 ரூபாய் அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டார்.

அதன்படி, உதகை மெயின் பஜார், மாரியம்மன் கோயில், ஊட்டி காபி ஹவுஸ் சதுக்கம், ஏடிசி பேருந்துநிலையம், சேரிங்கிராஸ் மையப்பகுதி உள்ளிட்ட பகுதிகளில் சாலையில் முகக்கவசம் அணியாமல் சென்ற பொதுமக்கள், வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், அத்தியாவசியப் பொருள்கள் வாங்குவோர் முகக்கவசம் இல்லாமல் வந்தால் அவர்களுக்குப் பொருள்கள் தரக்கூடாது என வியாபாரிகளை வட்டாட்சியர் எச்சரித்தார்.

இதையும் படிங்க: ஒரே நாளில் 1500 பேருக்கு அபராதம்!

கரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அதையடுத்து தற்போது ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியேறும்போது கட்டாயமாக முகக்கவசம் அணிந்து வர அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ரூ.50 அபராதம் விதித்த வட்டாட்சியர்

இந்த நிலையில், நீலகிரி மாவட்டம் உதகை பகுதியில் வட்டாட்சியர் ரவிக்குமார் முகக்கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு 50 ரூபாய் அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டார்.

அதன்படி, உதகை மெயின் பஜார், மாரியம்மன் கோயில், ஊட்டி காபி ஹவுஸ் சதுக்கம், ஏடிசி பேருந்துநிலையம், சேரிங்கிராஸ் மையப்பகுதி உள்ளிட்ட பகுதிகளில் சாலையில் முகக்கவசம் அணியாமல் சென்ற பொதுமக்கள், வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், அத்தியாவசியப் பொருள்கள் வாங்குவோர் முகக்கவசம் இல்லாமல் வந்தால் அவர்களுக்குப் பொருள்கள் தரக்கூடாது என வியாபாரிகளை வட்டாட்சியர் எச்சரித்தார்.

இதையும் படிங்க: ஒரே நாளில் 1500 பேருக்கு அபராதம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.