ETV Bharat / state

'கரோனாவை விட கொடுமையானது  மது கடை திறப்பு' - வைரலாகும் தொழிலாளியின் பாடல்

author img

By

Published : May 8, 2020, 9:02 PM IST

நெல்லை: கல்லிடைக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி முருகன் மதுகடை திறந்தது குறித்துப் பாடல் ஒன்றை பாடியுள்ளார்.

முருகன்
முருகன்

ஊரடங்கு உத்தரவு காரணமாக, தமிழ்நாட்டில் 40-திற்கும் மேற்பட்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் மதுபான கடைகள் திறக்கப்பட்டுள்ளன. கரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், டாஸ்மாக் திறக்கப்பட்டதற்குப் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் மதுபான கடைகள் திறக்கப்பட்டது குறித்தும், அதனால் ஏற்படப் போகும் விளைவு குறித்தும் நெல்லை மாவட்டம், கல்லிடைக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி முருகன் பாடல் ஒன்றைப் பாடியுள்ளார்.

அதில், 'ஊரடங்கு காலத்தில் ஒயின்ஷாப் எதற்கு... கூலித் தொழிலாளர்களுக்கு வேலை செய்ய அனுமதி கொடுத்துவிட்டு.... கரோனா தான் கொடுமை என்றால், இது அதைவிட கொடுமையானது' என்று அவர் பாடியுள்ள பாடல், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிறது. கூலித்தொழிலாளி முருகன் ஏற்கெனவே கரோனா விழிப்புணர்வு பாடல்களைப் பாடியுள்ளார்.

சற்று முன்பு உயர் நீதிமன்றம் விதித்த தகுந்த இடைவெளியைப் மது பிரியர்கள் பின்பற்றாததால், ஊரடங்கு முடியும் வரை டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதையும் படிங்க: கரோனாவால் நெல்லையில் முதல் உயிரிழப்பு

ஊரடங்கு உத்தரவு காரணமாக, தமிழ்நாட்டில் 40-திற்கும் மேற்பட்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் மதுபான கடைகள் திறக்கப்பட்டுள்ளன. கரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், டாஸ்மாக் திறக்கப்பட்டதற்குப் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் மதுபான கடைகள் திறக்கப்பட்டது குறித்தும், அதனால் ஏற்படப் போகும் விளைவு குறித்தும் நெல்லை மாவட்டம், கல்லிடைக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி முருகன் பாடல் ஒன்றைப் பாடியுள்ளார்.

அதில், 'ஊரடங்கு காலத்தில் ஒயின்ஷாப் எதற்கு... கூலித் தொழிலாளர்களுக்கு வேலை செய்ய அனுமதி கொடுத்துவிட்டு.... கரோனா தான் கொடுமை என்றால், இது அதைவிட கொடுமையானது' என்று அவர் பாடியுள்ள பாடல், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிறது. கூலித்தொழிலாளி முருகன் ஏற்கெனவே கரோனா விழிப்புணர்வு பாடல்களைப் பாடியுள்ளார்.

சற்று முன்பு உயர் நீதிமன்றம் விதித்த தகுந்த இடைவெளியைப் மது பிரியர்கள் பின்பற்றாததால், ஊரடங்கு முடியும் வரை டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதையும் படிங்க: கரோனாவால் நெல்லையில் முதல் உயிரிழப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.