தமிழர்களின் பாராம்பரிய திருநாளான பொங்கல் பண்டிகை தமிழ்நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டுவருகிறது. அந்த வகையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிலுவம்பாளையத்தில் உள்ள அவரது இல்லத்தில் பொங்கலை வெகு விமரிசையாக கொண்டாடி மகிழ்ந்தார்.
தமிழர்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் பொங்கலிட்டு, சிலம்பம், கரகாட்டம் ஒயிலாட்டம், பறையிசை முழங்க, நாட்டுப் புற கலை நிகழ்ச்சிகளோடு மக்களோடு பொங்கல் தினத்தை அவர் கொண்டாடினார். மேலும் அவர் உரியடியும் அடித்தார்.=
குழந்தைகளுடன் பொங்கல் விழாவை கொண்டாடிய நாகை எஸ்பி
இந்த பொங்கல் விழாவில் , அரசு அலுவலர்கள், எடப்பாடி பழனிசாமி உறவினர்கள், கலந்துகொண்டு உற்சாகத்தோடு கொண்டாடினர்.