நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியக்குழுவில் 14 வார்டுகள் உள்ளன. இதில் இரண்டாவது வார்டு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியல் பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
கருவேப்பம்பட்டி ஊராட்சியை உள்ளடக்கிய இந்த வார்டில் போட்டியிட அதே பகுதியைச் சேர்ந்த அன்பரசன் என்பவரின் பிள்ளை திருநங்கை ரியா (30) கடந்த மூன்றாம் தேதி திமுக சார்பில் ஊராட்சி மன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட விருப்ப மனு கொடுத்திருந்தார்.
இந்நிலையில், திருநங்கை ரியா இன்று திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தேர்தல் உதவி அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) பரமசிவனிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
எனவே, தமிழ்நாட்டில் முதன்முறையாக உள்ளாட்சித் தேர்தலில் கட்சி சார்பில் திருநங்கை ரியா போட்டியிடுவது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:கனிமொழியிடம் எழுத்துப் பூர்வமான ஆதாரம் கேட்ட உயர் நீதிமன்றம்!