மதுரையில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை உயர் சிகிச்சை பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில் கரோனா சிறப்பு சிகிச்சை மருத்துவமனை இயங்கி வருகிறது. மருத்துவமனை உள்ளிட்ட மதுரையின் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிகிச்சை மையங்களில் இதுவரை 9,302 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர்.
இந்நிலையில் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 483 பேர் கரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் மாவட்டத்தில் பூரண குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 6,448 ஆக அதிகரித்துள்ளது. அதேசமயம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 10 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததை அடுத்து, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 193ஆக உயர்ந்துள்ளது.