ETV Bharat / state

சாத்தான்குளம் காவல் துறையினரால் மற்றொரு கொலை? - ஏன் வழக்குப் பதியவில்லை என நீதிமன்றம் கேள்வி

author img

By

Published : Aug 7, 2020, 5:07 PM IST

மதுரை: சாத்தான்குளம் காவல் துறையினர், சட்டவிரோத காவலில் வைத்து தாக்கியதால் மகேந்திரன் என்பவர் உயிரிழந்தது தொடர்பாக ஏன் வழக்குப்பதிவு செய்யவில்லை என சிபிசிஐடியிடம் உயர் நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வியெழுப்பியுள்ளது.

high court madras bench
high court madras bench

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வடிவு என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "2020ஆம் ஆண்டு மே 18ஆம் தேதி கொலை வழக்கு தொடர்பாக காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அந்த வழக்கில் என் மகன் துரைக்கு தொடர்பு இருப்பதாகக் கூறி காவல் உதவி ஆய்வாளர் ரகு கணேஷ் மே 22ஆம் தேதி எனது வீட்டிற்கு வந்து அவரைப் பற்றி விசாரித்தார்.

மே 23ஆம் தேதி அதிகாலை 2 மணியளவில் எனது சகோதரி வீட்டிற்குச் சென்ற காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், ரகு கணேஷ் ஆகியோர் எனது மகன் துரை இல்லாத நிலையில் இளையமகன் மகேந்திரனை அழைத்துச் சென்று கடுமையாக தாக்கினர். இரண்டு நாட்கள் சட்டவிரோத காவலில் வைத்து சித்ரவதை செய்தனர். இதனால் அவரது தலை உள்பட பல இடங்களில் காயம் ஏற்பட்ட நிலையில் 24ஆம் தேதி இரவு அவரை விடுவித்தனர்.

ஏறத்தாழ சுயநினைவை இழக்கும் அளவிற்கு தாக்கப்பட்டிருந்தார். ஆனால் வசதியில்லாத காரணத்தால் என் மகனை மருத்துவமனையில் அனுமதிக்கவில்லை. இந்நிலையில், உடல் நலம் மிகவும் மோசம் அடையவே, மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், ஜூன் 13ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக உயர் அலுவலர்களிடம் புகார் அளித்தால் நீதிமன்ற காவலில் இருக்கும் எனது மகன் துரையும் விடுவிக்க மாட்டோம் என மிரட்டினர்.

அதற்கு அஞ்சி எவ்வித புகாரும் அளிக்கவில்லை. அப்போதுதான் சாத்தான்குளத்தில் தந்தை-மகன் உயிரிழந்த விவகாரத்தில் பல உண்மைகள் வெளிவந்தன. தொடர்ந்து மூன்று கிராம பஞ்சாயத்து மற்றும் ஊர் பெரியவர்களுடன் இணைந்து எனது மகன் இறப்பு குறித்து முறையாக விசாரித்து தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடமும், காவல் கண்காணிப்பாளரிடமும் மனு அளித்தேன். அம்மனு மீது தற்போது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

காவல் துறையினர் கடுமையாக தாக்கியதன் காரணமாகவே எனது மகன் மகேந்திரன் உயிரிழந்தார். ஆகவே எனது மகனின் இறப்பு குறித்து முறையாக விசாரிக்கவும் எனக்கு உரிய காவல்துறை பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிட வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

ஏற்கனவே இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த மனு நீதிபதி பொங்கியப்பன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிசிஐடி தரப்பில், விசாரணை நடைபெற்றுவருகிறது என தெரிவிக்கப்பட்டது.

தற்போது வரை ஏன் வழக்குப்பதிவு செய்யவில்லை என கேள்வியெழுப்பிய நீதிபதி சிபிசிஐடியின் பதில் திருப்தியளிக்கவில்லை என தெரிவித்தார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும்; இல்லையெனில், முழு விசாரணையை முடித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை செப்டம்பர் 8ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க: 'வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றும் நடவடிக்கைக்கு தடைவிதிக்க முடியாது'

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வடிவு என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "2020ஆம் ஆண்டு மே 18ஆம் தேதி கொலை வழக்கு தொடர்பாக காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அந்த வழக்கில் என் மகன் துரைக்கு தொடர்பு இருப்பதாகக் கூறி காவல் உதவி ஆய்வாளர் ரகு கணேஷ் மே 22ஆம் தேதி எனது வீட்டிற்கு வந்து அவரைப் பற்றி விசாரித்தார்.

மே 23ஆம் தேதி அதிகாலை 2 மணியளவில் எனது சகோதரி வீட்டிற்குச் சென்ற காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், ரகு கணேஷ் ஆகியோர் எனது மகன் துரை இல்லாத நிலையில் இளையமகன் மகேந்திரனை அழைத்துச் சென்று கடுமையாக தாக்கினர். இரண்டு நாட்கள் சட்டவிரோத காவலில் வைத்து சித்ரவதை செய்தனர். இதனால் அவரது தலை உள்பட பல இடங்களில் காயம் ஏற்பட்ட நிலையில் 24ஆம் தேதி இரவு அவரை விடுவித்தனர்.

ஏறத்தாழ சுயநினைவை இழக்கும் அளவிற்கு தாக்கப்பட்டிருந்தார். ஆனால் வசதியில்லாத காரணத்தால் என் மகனை மருத்துவமனையில் அனுமதிக்கவில்லை. இந்நிலையில், உடல் நலம் மிகவும் மோசம் அடையவே, மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், ஜூன் 13ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக உயர் அலுவலர்களிடம் புகார் அளித்தால் நீதிமன்ற காவலில் இருக்கும் எனது மகன் துரையும் விடுவிக்க மாட்டோம் என மிரட்டினர்.

அதற்கு அஞ்சி எவ்வித புகாரும் அளிக்கவில்லை. அப்போதுதான் சாத்தான்குளத்தில் தந்தை-மகன் உயிரிழந்த விவகாரத்தில் பல உண்மைகள் வெளிவந்தன. தொடர்ந்து மூன்று கிராம பஞ்சாயத்து மற்றும் ஊர் பெரியவர்களுடன் இணைந்து எனது மகன் இறப்பு குறித்து முறையாக விசாரித்து தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடமும், காவல் கண்காணிப்பாளரிடமும் மனு அளித்தேன். அம்மனு மீது தற்போது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

காவல் துறையினர் கடுமையாக தாக்கியதன் காரணமாகவே எனது மகன் மகேந்திரன் உயிரிழந்தார். ஆகவே எனது மகனின் இறப்பு குறித்து முறையாக விசாரிக்கவும் எனக்கு உரிய காவல்துறை பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிட வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

ஏற்கனவே இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த மனு நீதிபதி பொங்கியப்பன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிசிஐடி தரப்பில், விசாரணை நடைபெற்றுவருகிறது என தெரிவிக்கப்பட்டது.

தற்போது வரை ஏன் வழக்குப்பதிவு செய்யவில்லை என கேள்வியெழுப்பிய நீதிபதி சிபிசிஐடியின் பதில் திருப்தியளிக்கவில்லை என தெரிவித்தார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும்; இல்லையெனில், முழு விசாரணையை முடித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை செப்டம்பர் 8ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க: 'வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றும் நடவடிக்கைக்கு தடைவிதிக்க முடியாது'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.