மதுரை மாநகருக்குள்பட்ட மேலமடைப் பகுதியைச் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். இவர் பால் வியாபாரம் செய்துவருகிறார். இந்த நிலையில் இவர் வீட்டில் மீதமுள்ள பாலை தயிராகத் திரிப்பதற்கு பாலை அண்டாவில் காய்ச்சி வைத்திருந்தார்.
அப்போது அவருடைய இரண்டு வயது மகன் பார்த்தசாரதி எதிர்பாராதவிதமாக அண்டாவில் விழுந்து துடிதுடித்தது. படுகாயம் அடைந்த குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டுசென்று சிகிச்சை அளித்த நிலையில், நேற்று (அக். 1) காலை அந்தக் குழந்தை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தது.
இச்சம்பவம் குறித்து அண்ணாநகர் காவல் துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகிறது.