ETV Bharat / state

தந்தை இறந்த சோகத்தில் பிள்ளைகள் தற்கொலை முயற்சி

author img

By

Published : Dec 19, 2020, 5:36 PM IST

கிருஷ்ணகிரி: தந்தை இறந்த சோகம் தாங்க முடியாமல் அவரது பிள்ளைகள் தற்கொலைக்கு முயன்றனர்.

பிள்ளைகள் தற்கொலை முயற்சி
பிள்ளைகள் தற்கொலை முயற்சி

கிருஷ்ணகிரி மாவட்டம் இடையநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் நாகேஷ் (46), ராதா தம்பதி. இவர்களுக்கு யஷ்வந்த் என்ற மகனும், தனுஸ்ரீ என்ற மகளும் உள்ளனர்.

காமன்தொட்டி பகுதியில் உள்ள கால்நடை பராமரிப்பு அலுவலகத்தில் நாகேஷ் உதவியாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவர் பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.

அங்கு நாகேஷ் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த அவரது மனைவி பெங்களூருக்கு விரைந்தார். இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த தம்பதியின் மகன், மகள் ஆகியோர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர்.

உடனே அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தற்போது அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: விசாரணைக்கு வந்த இளைஞர் அரசுப் பேருந்தின் முன் பாய்ந்து தற்கொலை

கிருஷ்ணகிரி மாவட்டம் இடையநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் நாகேஷ் (46), ராதா தம்பதி. இவர்களுக்கு யஷ்வந்த் என்ற மகனும், தனுஸ்ரீ என்ற மகளும் உள்ளனர்.

காமன்தொட்டி பகுதியில் உள்ள கால்நடை பராமரிப்பு அலுவலகத்தில் நாகேஷ் உதவியாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவர் பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.

அங்கு நாகேஷ் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த அவரது மனைவி பெங்களூருக்கு விரைந்தார். இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த தம்பதியின் மகன், மகள் ஆகியோர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர்.

உடனே அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தற்போது அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: விசாரணைக்கு வந்த இளைஞர் அரசுப் பேருந்தின் முன் பாய்ந்து தற்கொலை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.