கரூர் மாவட்டத்தில் பாயும் காவிரி ஆற்றில் நெரூர், தளவாபாளையம், புகளூர், நொய்யல் உள்ளிட்ட இடங்களில் கதவணை கட்டும் பணி குறித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், கரூர் மாவட்டம் புகளூர் காவிரி ஆற்றில் தற்போது கதவணை கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசுகையில், தற்போது புகளூர் காவிரி ஆற்றில் கதவணை அமைக்கும் பணியுடன் சேர்த்து மின்சாரம் தயாரிப்பதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.