ஜார்க்காண்ட் மாநிலத்தில் ஆதிவாசி மற்றும் ஏழை மக்களின் நலன்களுக்காக கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக குரல் கொடுத்தும், சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வருபவர் ஸ்டேன் சாமி. அவர் பலமுறை ஏழை எளிய மக்களுக்காக அரசிடம் தொடர் கோரிக்கைகளை முன் வைத்து, மனித மாண்புகள் புறக்கணிக்கப்படும் போது அதற்கு நியாயம் கேட்டும் வந்துள்ளார்.
அவரை ஜார்க்கண்ட் காவல்துறையினர் சில தினங்களுக்கு முன்பு கைது செய்தனர். எனவே, அவரை கைது செய்ய காரணமான மத்திய அரசை கண்டித்தும், அவரை உடனே விடுதலை செய்ய கோரியும் கன்னியாகுமரி மாவட்டம் கோவளத்தில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் ஆஸ்டின் எம்எல்ஏ, பங்கு தந்தைகள் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் ஜார்க்கண்ட் அரசு மற்றும் மத்திய அரசுகளை கண்டித்து கண்டன உரையாற்றினர்.
இதையும் படிங்க: ’குட்கா விவகாரத்தில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள்’ : அம்பத்தூர் காவல் துணை ஆணையர் உறுதி