கன்னியாகுமரி மாவட்டம் வடலிவிலை பகுதியைச் சேர்ந்தவர் சிவன் (32). கட்டட தொழிலாளியான இவர் இரவில் தனது இருசக்கர வாகனத்தை வீட்டின் முன் நிறுத்தியுள்ளார். ஆனால் காலையில் இருசக்கர வாகனம் காணாமல்போனது அவருக்கு தெரியவந்தது.
இதுகுறித்து காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். பின்னர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை காவல் துறையினர் சோதனை செய்தனர். அப்போது இருசக்கர வாகனத்தை பெரியவிளை பகுதியைச் சேர்ந்த அர்ஜூன் என்ற இளைஞர் திருடிச் சென்றதும், அவர் மீது ஏற்கனவே திருட்டு வழக்கு இருப்பதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அர்ஜூனை காவல் துறையினர் தீவிரமாக தேடி கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர்.
இதையும் படிங்க: வேலூரில் தொடர் திருட்டில் ஈடுபட்ட கொள்ளையர்களின் புகைப்படம் வெளியீடு!