ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த புதுவடவள்ளியைச் சேர்ந்தவர் ரங்கசாமி. இவரது தோட்டத்தில் வாழை சாகுபடி செய்துள்ளார். வனத்தையொட்டி விவசாய நிலம் அமைந்துள்ளாதல் அடிக்கடி வனவிலங்குகள் பயிர்களை சேதப்படுத்துவது வாடிக்கையாகிவருகிறது.
இந்நிலையில் காட்டு யானைகள், இவரது தோட்டத்தில் புகுந்து வாழைகளை முறித்தும் தின்றும் மிதித்தும் நாசப்படுத்தியதில் குலை தள்ளிய நிலையிலிருந்த ரூ.1 லட்சம் மதிப்பிலான வாழைகள் சேதமடைந்தன. இதேபோல், தென்னை மரங்களையும் சேதப்படுத்தியுள்ளது.
இது குறித்து சத்தியமங்கலம் வனத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த வனத் துறையினர் ஆய்வு செய்து இழப்பீடு வழங்க பரிந்துரை செய்தனர்.
இதையும் படிக்க: ஈரோடு - கேர்மாளம் அருகே குண்டும் குழியுமான சாலை: அரசுப் பேருந்துகள் நிறுத்தம்