திண்டுக்கல் மாவட்டத்தில் இரண்டாம் கட்ட உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு பழனி, கொடைக்கானல், ஒட்டன்சத்திரம், தொப்பம்பட்டி, வேடசந்தூர், குஜிலியம்பாறை, வடமதுரை ஆகிய 7 ஊராட்சி ஒன்றியங்களுக்கு நடைபெற்று வருகிறது.
இந்த தேர்தலானது 7 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 10 மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிகளுக்கும், 107 ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் பதவிகளுக்கும், 162 கிராம ஊராட்சி தலைவர் பதவிகளுக்கும், 1,371 கிராம ஊராட்சி உறுப்பினர் பதவியிடங்களுக்கும் நடைபெறுகிறது.
காலை 7 மணியிலிருந்தே பொதுமக்கள் தங்களது வாக்குகளை ஆர்வமாக பதிவு செய்து வருகின்றனர். அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் பறக்கும் படையினரும், காவல் துறையினரும் தீவிரமான பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:
‘வேண்டாம் CAA - NRC’ - கருணாநிதி, ஸ்டாலின் வீடுகளில் கோலப் போராட்டம்!