திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அடுத்த புது வாணிக்கரையைச் சேர்ந்தவர் சரவணன். கொத்தனாரான இவர் தினந்தோறும் மது அருந்திவிட்டு வீட்டில் சண்டையிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். வழக்கம் போல் இவர் மது அருந்திவிட்டு வீட்டிற்குச் சென்று தகராறு செய்துள்ளார்.
இந்நிலையில் இவரது பாட்டி ராமாயி (85) சரவணனை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர், ராமாயியை கொடூரமாகத் தாக்கியுள்ளார். பின்னர் படுகாயம் அடைந்த மூதாட்டியை உறவினர்கள் மீட்டு வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இச்சம்பவம் குறித்து கூம்பூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க; கோவிட்-19 பெருந்தொற்று நோய் - உலக சுகாதார அமைப்பு