ETV Bharat / state

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற வாலிபர்! - cuddalore police

கடலூர் : சிங்கப்பூரில் வேலை வாங்கித் தருவதாக் கூறி ஏமாற்றிய தனியார் ஏஜெசின்சியிடமிருந்து பணத்தை திருப்பித்தர நடவடிக்கை எடுக்க வேண்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சித்த வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.

தீக்குளிக்க முயன்ற வாலிபர்
author img

By

Published : Mar 18, 2019, 10:08 PM IST

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒவ்வொரு வார திங்கள்கிழமை மக்கள் குறைத்தீர்ப்பு கூட்டம் நடைபெறும். தற்போது பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவித்து, தேர்தல் விதிமுறை காரணமாக மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் தேர்தல் முடியும் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த வாலிபர், தன் கையில் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை தலையில் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். இதனைப் பார்த்தப் போலீசார், வாலிபரிடமிருந்து மண்ணென்ணைக் கேனை பிடுங்கி எறிந்து அவரை காப்பாற்றினர்.

பின்னர் அவரை கைது செய்த போலீஸார், கடலூர் புதுநகர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். பின்னர் அவரை விசாரணை செய்ததில், கடலூர் மாவட்டம் விருதாச்சலம் சேர்ந்த வினோத் குமார் (24) என்பது தெரியவந்துள்ளது. இவர் தனியார் ஏஜென்சியில், சிங்கப்பூரில் வேலைக்காக 1.80 லட்சம் கொடுத்துள்ளார். பிப்ரவரி 19-ஆம் தேதி சிங்கப்பூர் சென்ற வினோத் குமாருக்கு கொடுப்பதாக கூறிய வேலை இல்லாமல் மாற்று வேலை கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த வினோத் குமார், ஏஜென்சியிடம் விளக்கம் கேட்டுள்ளார். அவர்கள் சரியான விளக்கம் கொடுக்காததால், 21-ஆம் தேதி திரும்பி வந்துள்ளார்.

vinoth kumar
வினோத் குமார்

பின்னர் நேரில் சென்று ஏஜென்சியிடம் பணத்தினை திருப்பி கேட்டவருக்கு, சரியான முறையில் பதிலளிக்காததால், மனமுடைந்த அவர் கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சித்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் ஏஜென்சியிடமிருந்து பணத்தினை வாங்கித் தருமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒவ்வொரு வார திங்கள்கிழமை மக்கள் குறைத்தீர்ப்பு கூட்டம் நடைபெறும். தற்போது பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவித்து, தேர்தல் விதிமுறை காரணமாக மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் தேர்தல் முடியும் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த வாலிபர், தன் கையில் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை தலையில் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். இதனைப் பார்த்தப் போலீசார், வாலிபரிடமிருந்து மண்ணென்ணைக் கேனை பிடுங்கி எறிந்து அவரை காப்பாற்றினர்.

பின்னர் அவரை கைது செய்த போலீஸார், கடலூர் புதுநகர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். பின்னர் அவரை விசாரணை செய்ததில், கடலூர் மாவட்டம் விருதாச்சலம் சேர்ந்த வினோத் குமார் (24) என்பது தெரியவந்துள்ளது. இவர் தனியார் ஏஜென்சியில், சிங்கப்பூரில் வேலைக்காக 1.80 லட்சம் கொடுத்துள்ளார். பிப்ரவரி 19-ஆம் தேதி சிங்கப்பூர் சென்ற வினோத் குமாருக்கு கொடுப்பதாக கூறிய வேலை இல்லாமல் மாற்று வேலை கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த வினோத் குமார், ஏஜென்சியிடம் விளக்கம் கேட்டுள்ளார். அவர்கள் சரியான விளக்கம் கொடுக்காததால், 21-ஆம் தேதி திரும்பி வந்துள்ளார்.

vinoth kumar
வினோத் குமார்

பின்னர் நேரில் சென்று ஏஜென்சியிடம் பணத்தினை திருப்பி கேட்டவருக்கு, சரியான முறையில் பதிலளிக்காததால், மனமுடைந்த அவர் கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சித்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் ஏஜென்சியிடமிருந்து பணத்தினை வாங்கித் தருமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாலிபர் தீக்குளிக்க முயற்சி

கடலூர்
மார்ச் 18,

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாலிபர் தீக்குளிக்க முயற்சி செய்ததால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை அன்று மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெறும். ஆனால் தற்போது பாராளுமன்ற தேர்தல் தேதியை அறிவித்து தொடர்ந்து தேர்தல் விதிமுறை காரணமாக மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் தேர்தல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த வாலிபர் தன் கையில் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை தலையில் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். இதனைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் தனிப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சேதுராமன் மற்றும் போலீசார் அந்த வாலிபரிடம் இருந்து மண்ணென்ணைக்கேணை பிடுங்கிடி தூக்கி எறிந்தனர்.

பின்னர் அவரை கைது செய்து கடலூர் போலீஸார் புதுநகர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர். விசாரணையின்போது கடலூர் மாவட்டம் விருதாச்சலம் சேர்ந்த வினோத் குமார் (24) இவர் வெளிநாட்டில் எலக்ட்ரீசியன் வேலை பார்ப்பதற்காக  தனியார் ஏஜென்சியில் உதவியை நாடியுள்ளார்.தனியார் ஏஜென்சி மூலம் சிங்கப்பூருக்கு எலக்ட்ரீசியன் வேலைக்கு செல்வதற்காக 1.80 லட்சம் ரூபாய் வழங்கி பிப்ரவரி மாதம் 19ம் தேதி சென்றுள்ளார்.

ஆனால் அவர் சிங்கப்பூர் சென்று பார்த்தபோது தனியார் ஏஜென்சி கூறியதுபோல் எலக்ட்ரீசியன் வேலை கொடுக்காமல் மாற்று வேலை கொடுக்கப்பட்டுள்ளது. வினோத்குமார் தனியார் ஏஜென்சியிடம் தொடர்பு கொண்டு இது சம்பந்தமாக விளக்கம் கேட்டுள்ளார். அவர்கள் சரியான பதில் கூறவில்லை இதனால் மனமுடைந்த வினோத்குமார் 21 ஆம் தேதி சிங்கப்பூரில் இருந்து தனது சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார்.

மேலும் அந்த தனியார் ஏஜென்சியை நேரில் சென்று தன்னுடைய பணத்தை கேட்டுள்ளார் ஆனால் அவர்கள் அதற்கு சரியான முறையில் பதில் கூறவில்லை.

இதனால் மனமுடைந்த வினோத்குமார் இன்று கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வந்து தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை தலையில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார் மேலும் தன்னை ஏமாற்றி பணம் பறித்த தனியார் ஏஜென்சி இடமிருந்து பணத்தை மீட்டுத் தருமாறு கண்ணீர் மல்க கூறினார். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.