ETV Bharat / state

வால்பறையில் சிறுத்தைப்புலி அட்டகாசம் அதிகரிப்பு - attraction

கோவை: வால்பாறையில் தொடர்ந்து வரும் சிறுத்தைப்புலி அட்டகாசத்தை கட்டுப்படுத்த பொதுமக்கள் வனத்துறை அலுவலர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

சிறுத்தைப்புலி
author img

By

Published : Jun 24, 2019, 11:50 PM IST

கோவை மாவட்டம், வால்பாறை அடுத்த அய்யர்பாடி பகுதியில் உள்ள எஸ்டேட் பகுதியில் மாடு ஒன்று மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது அந்த பகுதியில் பதுங்கியிருந்த சிறுத்தைப்புலி ஒன்று மாட்டைத் தாக்கிக் கொன்றது. இதைப்பார்த்த எஸ்டேட் தொழிலாளர்கள் அதிர்ச்சியடைந்து வீட்டை விட்டு வெளிவராமல் வீட்டிற்குள்ளேயே முடங்கியுள்ளனர்.

மேலும், எஸ்டேட் தொழிலாளர்கள் குடியிருப்பைச்சுற்றிலும் அடர்ந்த முட்புதர்களும், செடிகளும் படர்ந்து வளர்ந்துள்ளதால், சிறுத்தைப்புலி அந்த புதருக்குள் மறைந்திருப்பது தெரியவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து தொல்லைக் கொடுக்கும் சிறுத்தைப்புலியை வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என தொழிலாளர்கள் வனத்துறை அலுவலர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

இதேபோல் சில மாதங்களுக்கு முன்பு நடுமலை எஸ்டேட் தொழிலாளர் குடியிருப்பில் வீட்டுக்கு முன் விளையாடிக்கொண்டிருந்த சிறுவனை அருகில் உள்ள அடர்ந்த புதருக்குள் பதுங்கியிருந்த சிறுத்தைப்புலி அடித்து கொன்றது குறிப்பிடத்தக்கது.

கோவை மாவட்டம், வால்பாறை அடுத்த அய்யர்பாடி பகுதியில் உள்ள எஸ்டேட் பகுதியில் மாடு ஒன்று மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது அந்த பகுதியில் பதுங்கியிருந்த சிறுத்தைப்புலி ஒன்று மாட்டைத் தாக்கிக் கொன்றது. இதைப்பார்த்த எஸ்டேட் தொழிலாளர்கள் அதிர்ச்சியடைந்து வீட்டை விட்டு வெளிவராமல் வீட்டிற்குள்ளேயே முடங்கியுள்ளனர்.

மேலும், எஸ்டேட் தொழிலாளர்கள் குடியிருப்பைச்சுற்றிலும் அடர்ந்த முட்புதர்களும், செடிகளும் படர்ந்து வளர்ந்துள்ளதால், சிறுத்தைப்புலி அந்த புதருக்குள் மறைந்திருப்பது தெரியவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து தொல்லைக் கொடுக்கும் சிறுத்தைப்புலியை வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என தொழிலாளர்கள் வனத்துறை அலுவலர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

இதேபோல் சில மாதங்களுக்கு முன்பு நடுமலை எஸ்டேட் தொழிலாளர் குடியிருப்பில் வீட்டுக்கு முன் விளையாடிக்கொண்டிருந்த சிறுவனை அருகில் உள்ள அடர்ந்த புதருக்குள் பதுங்கியிருந்த சிறுத்தைப்புலி அடித்து கொன்றது குறிப்பிடத்தக்கது.

வால்பாறையில் தொடரும் சிறுத்தைபுலி அட்டகாசம். வால்பாறை-24
வால்பாறை  மற்றும் சுற்றியுள்ள எஸ்டேட்களில்  நாளுக்குநாள்  சிறுத்தைபுலி அட்டகாசம் தொடர்ந்து அதிகாpத்து வருகிறது. இந்நிலையில் வால்பாறை அருகே உள்ள அய்யர்பாடி எஸ்டேட் தொழிலாளர்கள் குடியிருப்பிருப்பிற்கு அருகே பகலில் மேய்ந்து கொண்டிருந்த மாட்டை அங்கு புதர்க்குள் பதுங்கியிருந்த சிறுத்தைப்புலி அடித்து கொன்றது. மேலும் ரொட்டிக்கடையைச்சேர்ந்த மல்லிகா கால்நடைகளை வளர்த்து வருகிறhர். வழக்கம்போல் அருகிலிருந்த புல்லினை மேய்ந்து கொண்டிருந்த போது, புதருக்குள் பதுங்கியிருந்த சிறுத்தைப்புலி மாட்டை அடித்து கொன்று, புதருக்குள் இழுத்து சென்றது.  மாட்டுக்கு இரண்டரை வயதிருக்கும். 
எஸ்டேட் தொழிலாளர்கள் குடியிருப்பைச்சுற்றிலும் அடர்ந்த முட்புதர்களும், செடிகளும் படர்ந்து வளர்ந்துள்ளதால், சிறுத்தைப்புலி அந்த புதருக்குள்  மறைந்திருந்து மாடுகள் மற்றும் கால்நடைகளை அடித்து கொன்றுவிடுவதால், எஸ்டேட் தொழிலாளர்களும், பொதுமக்களும், பள்ளிச்செல்லும் சிறுகுழந்தைகளும் மிகுந்த அச்சத்துடன்  வாழ்ந்து வருகின்றனர். சில மாதங்களுக்கு முன்பு நடுமலை எஸ்டேட்  தொழிலாளர் குடியிருப்பில் வீட்டுக்கு முன் விளையாடிக்கொண்டிருந்த சிறுவனை  அருகில் உள்ள அடர்ந்த புதருக்குள் பதுங்கியிருந்த சிறுத்தைப்புலி அடித்து கொன்ற  சம்பவம்  போல், மறுபடியும் இதுப்போன்ற சம்பவம் ஏற்படாமல் இருக்க தகுந்த நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர். சமீபத்தில் உயர்திரு. சார் ஆட்சியர் அவர்கள் எஸ்டேட் தொழிலாளர் குடியிருப்பைச்சுற்றிலும் உள்ள அடர்ந்த புதர்களை எஸ்டேட் நிர்வாகம் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டதை சில நாட்கள் மட்டும்  நடவடிக்கை எடுத்து விட்டு, ஆட்சியரின் உத்தரவினை தொடர்ந்து  செயல்படுத்தாமல், சார் ஆட்சியரின் உத்தரவினை காற்றில் பறக்கவிட்டு, தொடர்ந்து அலட்சிய போக்குடன், பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில்,;  தொழிலாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்காத தோட்ட நிர்வாகத்தின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழிலாளர்களும், சமூக ஆர்வலர்களும்  கோhpக்கை வைக்கின்றனர்.  
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.