கோவை பெரியகடை வீதியில் உள்ள ஸ்ரீ வாசவி செயின்ஸ் என்ற நகைக் கடையிலும், அதன் உரிமையாளர் பாலமுருகனின் வீட்டிலும் வருமானவரித் துறை அலுவலர்கள் ஆறு பேர் காலை 11:30 மணி அளவில் சோதனை மேற்கொண்டனர்.
மேலும் அதே பகுதியில் ராஜேஷ் என்பவருக்கு சொந்தமான கந்தா சில்வர்ஸ் என்ற மொத்த வியாபார கடையிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த சோதனையானது பணமதிப்பிழப்பின்போது பல லட்சம் மதிப்புள்ள ரூபாய்களை வங்கி கணக்கில் பரிவர்த்தனை செய்த புகாரின் பேரில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதேபோல் கிருஷ்ணகிரியில் உள்ள வெங்கடேஸ்வரா என்ற தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான பிரபல நகைகடைகள் இயங்கிவருகிறது. காலை சுமார் 11 மணியளவில், தீடீரென வந்த வருமானவரித் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்
நகைக்கடை மூடப்பட்டு சோதனை மேற்கொண்டதால். நகைகள் வாங்க வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
இதையும் படிங்க: காவல் துறை அலட்சியம்: மளிகை கடையில் மது அமோக விற்பனை