சென்னை டி.பி.சத்திரத்தில் வசித்துவருபவர் அருணா. இவர் கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்துவந்தார்.
இந்நிலையில், அருணா நேற்று (மே 27) வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்ந்தனர். இதனிடையே மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அருணா சிகிச்சைப் பலனின்றி இன்று உயிரிழந்தார்.